முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.என். சிந்துரக்சக் நல்ல நிலையில்தான் இருந்தது: ரஷ்யா

புதன்கிழமை, 14 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

மாஸ்கோ, ஆக. 15 - மும்பையில் விபத்தில் சிக்கிய ஐ.என்.எஸ். சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பல் தங்களது நாட்டில் இருந்து ஜனவரி மாதம் திரும்பிய போது நல்ல நிலையிலேயே இருந்தது என்று ரஷிய நிறுவனம் தெரிவித்துள்ளது.ரசிய தயாரிப்பான ஐ.என்.எஸ் சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் உள்ள பேட்டரிகளில் ஹைட்ரஜன் வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ரசியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சுமார் 80 மில்லியன் டாலர் அளவுக்கு இந்தியாவால் செலவிடப்பட்டு கடந்த ஜனவரி மாதம் இந்தியாவுக்குத் திரும்பி வந்தது. தற்போதும் ரசியாவின் ாவாரண்டிா இந்த நிறுவனத்துக்கு இருக்கிறது. இந்நிலையில் மும்பையில் நேற்று சிந்துரக்சக் நீர்மூழ்கிக் கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு 18 வீரர்கள் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஆனால் ரசிய நிறுவனமோ ஜனவரி மாதம் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட போது நீர்மூழ்கிக் கப்பல் நன்றாகத்தானே இருந்தது என்று கூறியுள்ளது. மேலும் எப்படி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தங்களுக்குத் தெரியவில்லை என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்