முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்பத் தகராறில் ராணுவ வீரர் சுட்டதில் 3 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 8 மே 2011      தமிழகம்
Image Unavailable

சந்தெளலி, மே - 8 - குடும்ப தகராறு காரணமாக ஆத்திரமடைந்த ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் 3 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள்.மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் டேவ்ட்ஹில் என்ற இடத்தைச் சேர்ந்தவர் தர்மேந்திரா என்ற ரிங்கு. இவருக்கும் இவரது குடும்பத்தைச் சேர்ந்த வேறு சிலருக்கும் இடையே தகராறு இருந்துவந்தது. இந்த தகராறு மோதலாக முற்றியபோது ஆத்திரமடைந்த தர்மேந்திரா, எதிர்தரப்பினரை நோக்கி தான் வைத்திருந்த லைசென்ஸ் பெற்ற துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் சந்தோஷ் திவாரி, கிஸ்மாகாந்த், அரவிந்த் ஆகிய 3 பேர் குண்டுபாய்ந்து ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பலியானார்கள். மேலும் இரண்டு பேர் படுகாயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக தர்மேந்திரா என்ற ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர். தர்மேந்திரா மீதும் அவரது ஆதரவாளர்கள் 3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்