எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, மே. - 9 - நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பை ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி ஆகியோரது பெயர்களையும் சேர்க்க வேண்டும் என்று டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் ஒருவர் மனுத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணையை மே 24 ம் தேதிக்கு நீதிபதி ஷைனி தள்ளி வைத்தார்.
உலகிலேயே இமாலய ஊழலாக கருதப்படுவது ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலாகும். காரணம் இந்த ஊழலால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ. 1.76 லட்சம் கோடி என கூறப்படுகிறது. இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ராசா, அவரது செயலாளர்கள் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த்த பெகுரா மற்றும் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் 5 நிறுவன அதிகாரிகள் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவ்வழக்கில் கைதான ராசா உள்ளிட்ட பலரும் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் அம்பலமானது. இந்த டி.வியில் கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீத பங்குகளும், கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகளும், இதன் நிர்வாக இயக்குனர் சரத்குமாருக்கு 20 சதவீத பங்குகளும் உள்ளன. கலைஞர் டி.விக்கு ரூ. 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக கனிமொழியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சி.பி.ஐ. சார்பில் கனிமொழிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. மே. 6 ம் தேதி சிறப்பு கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று அவருக்கு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையும் கனிமொழி எம்.பிக்கு சம்மன் அனுப்பியது. இதையடுத்து கடந்த 4 ம் தேதியன்று கனிமொழி டெல்லி புறப்பட்டு சென்றார். பின்னர் 6 ம் தேதி அவர் தனிக்கோர்ட்டில் ஆஜரானார். அன்றே அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை நீதிபதி வருகிற 14 ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். ஆனாலும் தினந்தோறும் நீதிமன்றம் வந்து கையெழுத்திட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டுள்ளார். 14 ம் தேதி வரை கனிமொழி கைதாக மாட்டார் என்பது இதன் மூலம் தெரிகிறது. மே 14 ம் தேதியன்று அவருக்கு பெயில் கிடைக்குமா? அல்லது ஜெயில் தண்டனை கிடைக்குமா என்பது தெரிந்து விடும்.
இந்த நிலையில் கலைஞர் டி.வியில் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயர் சி.பி.ஐ. குற்றப் பத்திரிக்கையில் சேர்க்கப்படவே இல்லை. 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியை சேர்த்திருக்கும் போது 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது. இதில் புலனாய்வுத் துறை பாரபட்சம் காட்டுகிறதோ என்ற ஐயப்பாடும் எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தமிழக முதல்வர் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாள் பெயரையும், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி பெயரையும் சேர்க்க வேண்டும் என்று கோரி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் பொதுநலன் கருதி ஒரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை டெல்லியை சேர்ந்த பத்திரிக்கையாளர் எம். பர்குவான் தாக்கல் செய்துள்ளார். குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதில் கூட மத்திய புலனாய்வு துறை பாரபட்சம் காட்டுகிறது என்று பர்குவான் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கு விசாரணையை சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி வரும் 24 ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அரசியல் தரகர் நீரா ராடியா மற்றும் டாடா சன்ஸ் நிறுவன சேர்மன் ரத்தன் டாடா ஆகியோரது பங்கு குறித்து மேல் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி காசியாபாத்தை சேர்ந்த தர்மேந்தர் பாண்டே என்பவர் ஒரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வரும் 24 ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. அன்றைய தினமே தயாளு அம்மாளை சேர்க்க வேண்டும் என்று கோரும் மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
தயாளு அம்மாளை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருக்கும் டாக்டர் முகமது பர்குவான் தான் ஒரு பத்திரிக்கையாளன் என்று தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அனில் அம்பானியை இந்த வழக்கில் சேர்க்காத விஷயத்தில் சி.பி.ஐ. செய்துள்ள குறைபாடுகளையும் பத்திரிக்கையாளர் பர்குவான் சுட்டிக் காட்டியுள்ளார். ரிலையன்ஸ் குழும அதிகாரிகளான கவுதம் தோஷி, சுரேந்திர பிப்பாரா மற்றும் ஹரிநாயர் ஆகியோர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். குற்றப்பத்திரிக்கை தாக்கலான பிறகு இவர்கள் சிறையில் உள்ளனர். இவர்கள் எல்லாம் அந்த கம்பெனியில் ஒரு சாதாரண ஊழியர்கள். அனில் அம்பானிக்கு தெரியாமல் அல்லது அவரது சம்மதம் இல்லாமல் இவர்களால் எந்த குற்றத்தையும் செய்திருக்க முடியாது என்றும் டாக்டர் பர்குவான் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே அனில் அம்பானியையும் இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்றும் பர்குவான் கோரியுள்ளார்.
ஆனால் சி.பி.ஐ. அதற்கான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் கலைஞர் டி.வியில் தயாளு அம்மாளுக்கு 60 சதவீத பங்குகள் உள்ளன. அவரது டி.வியின் இயக்குனராவார். ஆனால் குற்றப்பத்திரிக்கையில் இவரது பெயர் விடுபட்டுள்ளது. புலனாய்வு துறை(சி.பி.ஐ.) குற்றவாளிகளை தேர்ந்தெடுக்கிறதோ என்ற சந்தேகம் இதன் மூலம் எழுகிறது என்றும் பர்குவான் தனது மனுவில் கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். தமிழ் மையம் என்ற அமைப்பை பற்றியும் இவர் தனது மனுவில் கூறியுள்ளார். இந்த மையம் கனிமொழி மற்றும் தயாளு அம்மாள் ஆகியோரது கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ள அவர், இந்த அமைப்புக்கு பணம் கொடுத்தவர்கள் பட்டியலையும் தனது மனுவுடன் இணைத்துள்ளார். இவ்வாறு பணம் கொடுத்த கம்பெனிகளில் சில, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உரிமம் பெற்ற கம்பெனிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியிருக்கும் போது தயாளு அம்மாள் பெயர் விடுபட்டிருப்பது சந்தேகத்தை எழுப்புகிறது என்றும் அவர் கூறியுள்ளார். எனவே ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கருணாநிதியின் துணைவியார் தயாளு அம்மாளையும், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானியையும் சேர்க்க வேண்டும் என்றும் பத்திரிக்கையாளர் பர்குவான் தனது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த மனு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 24 ம் தேதி நடைபெறும் என்று சி.பி.ஐ. நீதிபதி ஷைனி அறிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.