முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ராணுவம் 11-வது நாளாக எல்லையில் அத்துமீறல்

செவ்வாய்க்கிழமை, 20 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

ஜம்மு, ஆக.21 - பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சமீபத்தில் இந்திய எல்லைக்குள் புகுந்து 5 இந்திய ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்றனர். இதற்கு மத்திய அரசு உரிய பதிலடி நடவடிக்கை எடுக்காமல் வெறும் கண்டனத்தை மட்டும் தெரிவித்தது. இந்திய ராணுவம் பொறுமையாக இருப்பதை, சாதகமாக எடுத்துக் கொள்ளும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கடந்த 10 நாட்களாக தினமும் தாக்குதல் நடத்தினார்கள். எல்லையோர கிராமங்கள் மீது பீரங்கியால் சுட்டனர். நேற்றும் 11-வது நாளாக பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தாக்குதலில் ்ஈடுபட்டனர். காஷ்மீர் மாநிலம் புஞ்ச் மாவட்டத்தில் உள்ள மெந்தர் செக்டாரில் நேற்றிரவு 9.30 மணிக்கு பாகிஸ்தான் வீரர்கள் திடீரென எல்லை தாண்டி வந்து தாக்குதல் நடத்தினார்கள்.

மெந்தர் செக்டாரில் தொடர்ந்து தாக்குதல் நடப்பதால் அங்கு இந்திய வீரர்கள் கூடுதலாக நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. இன்று காலை 6 மணி வரை இந்த தாக்குதல் நீடித்தது. இந்த தாக்குதலில் இந்திய தரப்பில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago