முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் நடைமேடையில் ஏறிய பயணிகள் ரயில்

திங்கட்கிழமை, 9 மே 2011      தமிழகம்
Image Unavailable

நாகர்கோவில், மே - 09 - நாகர்கோவில் ரயில் நிலையத்தில் திருவனந்தபுரம் பயணிகள் ரயில் நடைமேடையில் ஏறி இறங்கியது. இதனால் நடைமேடையில் சிமெண்ட் தளம் சேதம் அடைந்தது. அப்போது ஏற்பட்ட அதிபயங்கர சத்தத்தால் பயணிகள் அலறிஅடித்து ஓடினர். நாகர்கோவில் கோட்டாறு ரயில் நிலையத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு தினமும் 4 பயணிகள் ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்கள் நடைபாதை 1 ஏ வழியாகத்தான் இயக்கபட்டுவருகிறது. வழக்கம்போல் நேற்று காலை 6.45 க்கு திருவனந்தபுரம் செல்ல வேண்டிய பயணிகள் ரயில்  யார்டில் சுத்தம் செய்ய நிறுத்தப்பட்டிருந்தது. சுத்தம் செய்யப்பட்ட பின்னர் அந்த யிலை டிரைவர் அப்புகுட்டன் நேற்று அதிகாலை 2.30 மணிக்கு நடைபாதை 1 ஏ பகுதிக்கு கொண்டு வந்தார். அப்போது ரயில் திடீரென தண்டவாளத்தில் தடம்புரண்டு  நடைபாதையில் ஏறியது. அப்போது நடைபாதை சிமெண்ட்தளத்தில் அதிபயங்கர சத்தத்தோடு மோதியது. பின்னர் மிதமான வேகத்தில் அந்த நடைபாதை சிமெண்ட் தளத்திலேயே ரயில் வந்தது. இதனால் அதிக சத்தம் ஏற்பட்டது. அதனைக்கண்டு பயணிகள் அலறிஅடித்து ஓடினர்.
அதனையடுத்து டிரைவர் அப்புகுட்டன் ரயிலின் இயக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்து நிறுத்தினார். அதற்குள் ரயிலின் கடைசிப்பெட்டி நடைமேடையை முழுதும் இடித்து சேதமாக்கியது. இந்த சம்பவத்தின் போது அதிகாலை நேரம் என்பதால் அந்த நடைபாதையில் யாரும் இல்லை அதனால் உயிர்சேதம் இன்றி போனது. அது மட்டுமன்றி ரயிலிலும் பயணிகள் யாரும் இல்லாததனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
 இந்த தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அங்கு நிலையத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் நடைபாதையில் ஏறி நின்ற ரயிலை இயக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடியும் நடைமேடையில் இருந்து ரயில் பெட்டியை கீழே கொண்டு வரமுடியவில்லை. திருவனந்தபுரம் ரயில் செல்லும் நேரம் நெருங்கியதால் நடைபாதையில் நின்ற ரயில் பெட்டி இரண்டையும் கழற்றி விடப்பட்டு மீதமுள்ள பெட்டியுடன் 45 நிமிடம் தாமதமாக ரயில் திருவனந்தபுரத்திற்கு இயக்கப்பட்டது. அந்த ரயிலை வேறு டிரைவர் இயக்கினார். விபத்துக்கு காரணமான டிரைவர் அப்புகுட்டனிடம் ரயில்வே உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்