முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிபிஐ நீதிமன்றத்தில் அனில் அம்பானி புலம்பல்

வியாழக்கிழமை, 22 ஆகஸ்ட் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லிஆக.23 -  ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று ஆஜரான ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி, நிறுவனத்தின் போர்டு மீட்டிங்குகள் பற்றி நினைவில் இல்லை என்று கூறியிருக்கிறார். மேலும் போர்டு மீட்டிங் குறிப்புகளும் கூட தம்மால் தயாரிக்கப்பட்டவை அல்ல .. ஆனால் அவை நிச்சயம் உண்மையானவையே என்றும் கூறியுள்ளார்.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்களில் ஒன்று ஸ்வான். இது ரிலையன்ஸ் குழுமத்தால் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஸ்வான் நிறுவனத்துக்கு அலைக்கற்றை உரிமம் பெற தகுதி இல்லாத நிலையிலும் முறைகேடாக உரிமம் பெறப்பட்டது என்பது சிபிஐ புகார். இது தொடர்பாக ரிலையன்ஸ் குழும அதிகாரிகள் மூவர் கைது செய்யபட்டும் உள்ளனர்.

இந்த வழக்கில் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி ஆகியோரை சிபிஐ தங்கள் தரப்பு சாட்சியமாக சேர்த்துள்ளது. மேலும் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் இருவரும் ஆஜராக சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பியது.

ஆனால் ரிலையன்ஸ் குழுமத்துக்கும் ஸ்வான் நிறுவனத்துக்கும் எந்த தொடர்புமே இல்லை என்று கூறி நீதிமன்றங்களில் அனில் அம்பானி, டினா அம்பானி முறிைடு செய்து பார்த்தனர். ஆனால் அவர்கள் முறிைட்டுக்குப் பலனில்லை. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் ஆஜராகிறோம் என்று இருவரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர்.

இதனால் நாளை அனில் அம்பானியும் நாளைமறுநாள் டினாவும் ஆஜராக கடந்த மாதம் சிபிஐ நீதிமன்றம் புதிய சம்மனை அனுப்பியது. ஆனாலும் அனில் அம்பானி மீண்டும் ஆஜராக விலக்கு கோரி மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை நேற்று முன்தினம் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.

இதைத் தொடர்ந்து நேற்று காலை அனில் அம்பானி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, ஏராளமான போர்டு மீட்டிங்குகளில் நான் கலந்து கொண்டிருக்கிறேன். என்னால் அவற்றை நினைவுபடுத்த முடியவில்லை, ஆவணங்களில் உள்ளவைதான் உண்மையானவை என்றார்.

அதற்கு நீதிபதி ஓபி ஷைனி, நீங்கள் பொய்யான ஆவணங்களை பரமாரிக்கவில்லை.. உங்களது ஆவணங்கள் நிச்சயமாக சரியானதுதானா என்றார். அதற்கு பதிலளித்த அனில் அம்பானி, நிச்சயமாக ஆவணங்கள் அனைத்தும் சரியானவையே என்றார். மேலும் போர்டு மீட்டிங்குகளில் எழுதப்படும் குறிப்புகள் என்னால் எழுதப்படுவை அல்ல. என்னுடைய பணியாளர்களால் எழுதப்படுகிறவை என்றும் அனில் அம்பானி சுட்டிக்காட்டினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்