எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மும்பை, மே - 9 - மும்பை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் தோல்வியை சந்தித்தது. ஐ.பி.எல். தொடரின் 49-வது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பலம் மிகுந்த மும்பை அணியை, புள்ளிகள் பட்டியலில் மோசமான நிலையில் உள்ள டெல்லி டேர்டெவில்ஸ் அணி சந்தித்தது. டெல்லி அணி கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கியது. டாசை வென்ற டெல்லி அணியின் சேவாக் நம்பிக்கையுடன் பீல்டிங்கை தேர்வு செய்தார். மும்பை அணியின் துவக்க வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிலிஸார்டு ஆகியோர் களமிறங்கினர். இதில் பிலிஸார்டு ஆரம்பத்தில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சச்சின் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இருவரும் 5.2 ஓவர்களில் முதல் விக்கெட்டிற்கு 50 ரன்களை சேர்த்த நிலையில், சச்சின் டெண்டுல்கர் 14 ரன்கள் எடுத்த நிலையில் இர்பான் பதானின் பந்தில் கிளீன் போல்டானார். அடுத்ததாக மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் அம்பதி ராயுடு களமிறங்கினார். அப்போது அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த பிலிஸார்டு 37 ரன்களில் நதீமின் பந்தில் சேவாக்கிடம் பிடிகொடுத்து அவுட்டானார். அப்போது மும்பை அணி 7 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 54 ரன்களை எடுத்திருந்தது. இவரைத் தொடர்ந்து ரோகித் சர்மா, ராயுடுவுடன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் டெல்லி பந்துவீச்சாளர்களை கதற வைத்தனர். ராயுடுவும், சர்மாவும் 3 விக்கெட்டிற்கு 33 பந்துகளில் 50 ரன்களை எடுத்தனர். தொடர்ந்து மும்பை ஸ்கோர் 141 ஆக இருந்தபோது ரோகித் சர்மா ரன் குவிக்கும் முயற்சியில் தனது விக்கெட்டை இழந்தார். இவர் 49 ரன்கள் எடுத்த நிலையில் மோர்கலின் பந்துவீச்சில் வேணுகோபால் ராவால் அற்புதமாக கேட்ச் பிடிக்கப்பட்டார். தொடர்ந்து போலார்டு களமிறங்கினார். இந்நிலையில் டெல்லி அணியினரின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. மும்பை அணியின் எண்ணிக்கை 172 க்கு உயர்ந்தபோது அதிரடி வீரர் ராயுடு 59 ரன்கள் எடுத்த நிலையில் ஹோப்ஸின் பந்தில் சேவாக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டார். இறுதி ஓவரில் மும்பை அணியால் அதிரடியாக ரன் குவிக்க முடியாத வகையில் அகார்கர் கடைசி ஓவரை சிறப்பாக வீச மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்தது. போலார்டு 9 ரன்களையும், ஆன்ட்ரூ சைமண்ட்ஸ் 4 ரன்களையும் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டெல்லி தரப்பில் நதீம், பதான், மோர்கல், ஹோப்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கியது டெல்லி டேர்டெவில்ஸ். அந்த அணியின் துவக்க வீரர்கள் சேவாக் மற்றும் வார்னர் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்கினர். டெல்லி அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த மும்பை கேப்டன் சச்சின் துவக்க ஓவரிலேயே சுழல் பந்தை அறிமுகப்படுத்தினார். இந்த முயற்சிக்கு கைமேல் பலன் கிடைத்தது. ஹர்பஜன் பந்தில் ஆரம்பத்தில் இருந்தே தடுமாறிய டெல்லி வீரர்களில் வார்னர் அந்த ஓவரின் 5 வது பந்தை கால் காப்பில் வாங்கி அவுட்டானார். இதனால் முதல் ஓவரிலேயே அந்த அணி முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்த வீரராக இங்ராம் களமிறங்கினார். இரண்டாவது ஓவரை இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய லசித் மலிங்கா வீசினார். முதல் பந்திலேயே இங்ராம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. அடுத்த ஓவரை முனாப் பட்டேலை வீசச் செய்தார் சச்சின். இந்த ஓவரின் முதல் பந்திலேயே அதிரடி வீரர் சேவாக், ரோகித் சர்மாவிடம் பிடிகொடுத்து அவுட்டாக டெல்லி அணியின் வெற்றிக் கனவு தகர்ந்தது. 2.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 4 ரன்களில் தத்தளித்தது டெல்லி டேர்டெவில்ஸ். தொடர்ந்து வந்த ஓஜாவும் 1 ரன் எடுத்த நிலையில் முனாப் பட்டேலின் பந்தில் விக்கெட் கீப்பர் ராயுடுவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக 7 ரன்களுக்குள் 4 வது விக்கெட்டும் பறிபோனது. தொடர்ந்து ஜோடி சேர்ந்த வேணுகோபால் ராவ் மற்றும் ஹோப்ஸ் ஆகியோர் டெல்லி அணிக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். இந்த ஜோடி இருக்கும் வரை டெல்லி அணிக்கு நம்பிக்கை உண்டானது. ஆனால் அணியின் ஸ்கோர் 94 ஐ எட்டியபோது வேணுகோபால்ராவ் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் குல்கர்னியின் பந்தில் கிளீன்போல்டானார். அடுத்து இர்பான் பதான், ஹோப்ஸுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் நல்ல முறையில் அடித்து ஆடியது. இந்நிலையில் 55 ரன்கள் எடுத்திருந்த ஹோப்ஸ் ரன் அவுட்டானார். இதனால் 16.5 ஓவர்களில் 123 ரன்கள் எடுத்திருந்த டெல்லி அணி 6 விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த நாகர் ரன் எதுவும் எடுக்காமல் ஹர்பஜன்பந்தில் அவுட்டானார். தொடர்ந்து அகர்கர் களமிறங்கினார். அப்போது 18 பந்துகளில் 23 ரன்களை எடுத்திருந்த பதான், மலிங்காவின் வேகத்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்துவந்த மோர்கெலும், நதீமும், மும்பை ஆல்ரவுண்டர் போலார்டின் பந்தில் தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுக்க டெல்லி அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது. அகார்கர் ஆட்டமிழக்காமல் 7 ரன்களை எடுத்திருந்தார். மும்பை தரப்பில் ஹர்பஜன்சிங், மலிங்கா, முனாப்பட்டேல், போலார்டு தலா 2 விக்கெட்டுகளையும், குல்கர்னி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன் காரணமாக டெல்லி அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. மும்பை அணியின் அம்பதி ராயுடு ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மும்பை அணி தனது 8 வது வெற்றியை பதிவு செய்து மொத்தம் 16 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி தான் விளையாடிய 11 போட்டிகளில் 4 ல் மட்டும் வெற்றிபெற்று 8 புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.