எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெங்களூர், மே - 9 - ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் அதிரடியால் 9 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியை சந்தித்தது கொச்சின் டஸ்கர்ஸ்.ஐ.பி.எல். போட்டித் தொடரின் 50 வது போட்டி நேற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் ராயல் சேலன்ஜர்ஸ் அணியும், கொச்சின் டஸ்கர்ஸ் கேரளா அணியும் மோதின. டாசில் வென்ற கொச்சின் அணி கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கிளின்ஜர் மற்றும் மெக்கலம் ஆகியோர் துவக்கத்தில் அதிரடியைக் காட்டினர். அணியின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தபோது மெக்கலம் 22 ரன்கள் எடுத்த நிலையில் வெட்டோரியின் பந்தில் அருண்கார்த்திக்கால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அடுத்ததாக பட்டேல் களமிறங்கினார். அணியின் ஸ்கோர் 8.2 ஓவர்களில் 64 ஆக இருந்தபோது கிளின்ஜர், கிறிஸ்கெய்லின் பந்துவீச்சில் கிளீன்போல்டானார். அடுத்து கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே களமிறங்கினார். ஆனால் இவர் ரன் குவிக்க தவறினார். 3 ரன்களை மட்டும் எடுத்த ஜெயவர்த்தனே, வெட்டோரியின் பந்தில் விக்கெட் கீப்பர் டிவில்லியர்சால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். அப்போது அணியின் எண்ணிக்கை 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 72. தொடர்ந்து ஹாட்ஜ் களமிறங்கினார். மேலும் ஒரு ரன்னை மட்டுமே சேர்த்த நிலையில் 19 ரன்களை எடுத்திருந்த பட்டேல் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். இதனால் புனே அணி 4 வது விக்கெட்டையும் இழந்தது. தொடர்ந்து ஹாட்ஜ் 5 ரன்களை மட்டும் சேர்த்த நிலையில் அரவிந்தின் பந்துவீச்சில் ஜாஹீர்கானால் கேட்ச் பிடிக்கப்பட்டு அவுட்டானார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் புனே அணியால் ரன் குவிப்பில் ஈடுபட முடியவில்லை. மிடில் ஆர்டரில் அந்த அணியில் ரவீந்திர ஜடேஜா மட்டும் 41 பந்துகளில் 23 ரன்களை சேர்த்தார். இதனால் கொச்சின் டஸ்கர்ஸ் 20 ஓவர்களின் முடிவில் 125 ரன்களை மட்டும் எடுத்தது. ரமேஷ் பவார் ஆட்டமிழக்காமல் 8 ரன்களையும், பரமேஸ்வரன் 1 ரன்னையும் எடுத்தனர். பெங்களூர் தரப்பில் வெட்டோரி, அரவிந்த் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜாகீர்கான், கெய்ல், மிதுன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை விரட்டிய பெங்களூர் ராயல் சேலன்ஜர்ஸ் அணியின் துவக்க வீரர்கள் அதிரடியாக துவக்கினர். அதிரடி வீரர் கிறிஸ்கெய்ல் மற்றும் தில்ஷன் ஆகியோர் பந்துகளை பறக்க விட்டனர். அணியின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்தபோது கிறிஸ்கெய்ல் 44 ரன்களை எடுத்திருந்தபோது வினய்குமாரின் பந்தில் விக்கெட்டை இழந்தார். இவரது 44 ரன்களில் 5 சிக்சர்களும், 3 பவுண்டரிகளும் அடங்கும். 3.5 ஓவர்களிலேயே பெங்களூர் அணி 67 ரன்களை குவித்துவிட்டது. தொடர்ந்து இளம் விராட் ஹோக்ளி களம் இறங்கினார். இவரும் தில்ஷானும் புனே அணியின் பந்துவீச்சை எளிதாக கையாண்டனர். இதனால் பெங்களூர் அணிக்கு வெற்றி இலக்கு மிகச் சுலபமானது. அந்த அணி 13.1 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 128 ரன்களை குவித்தது. தில்ஷான் ஆட்டமிழக்காமல் 52 ரன்களையும், விராட் ஹோக்ளி 27 ரன்களையும் எடுத்திருந்தனர். புனே தரப்பில் வினய்குமார் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். ஆட்ட நாயகனாக கிறிஸ்கெய்ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் 9 விக்கெட் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பெற்றது ராயல் சேலன்ஜர்ஸ் பெங்களூர் அணி. பரிதாப தோல்வி அடைந்தது கொச்சின் டஸ்கர்ஸ்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.