முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏமன் விமானப் படை பஸ்ஸில் குண்டு வெடித்து 6 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 25 ஆகஸ்ட் 2013      உலகம்
Image Unavailable

 

சனா, ஆக.26  - ஏமன்  நாட்டு தலைநகரான சனாவில் விமானப் படைக்கு சொந்தமான பஸ்ஸில் குண்டு வெடித்தது. இதில் இந்த விமானப்படை  பஸ்ஸில் சென்ற வீரர்கள் 6 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர் என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இதுபற்றி விமானப்படை அதிதாரி அமீன் சாரி கூறியதாவது: 

இந்த பஸ்ஸில் வைத்திருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். இதில் காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார்கள். 2011-ம் ஆண்டுக்குப் பிறகு முன்னாள் அதிபர் அல் அப்துல்லா சலாஹை எதிர்த்து நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களால் ஏமன் நாடு பெரும் சிக்கலில் சிக்கிஉள்ளது என்றார். ராணுவத்தினர் மீது நடைபெறும் தாக்குதல் சகஜமாகிவிட்டது. 2012-ம் ஆண்டு தற்கொலைப்படை தாக்குதலில் 90 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்