முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தாவூத் இருப்பிடம் பற்றி பாக். கூறுவது பச்சைப்பொய்

திங்கட்கிழமை, 9 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.10 - தாவூத் இப்ராகிம் இருப்பிடம் குறித்து பாகிஸ்தான் கூறி வருவது பச்சைப்பொய். இதே போல்தான் ஒசாமா பின்லேடன் பற்றி அமெரிக்காவிடம் அந்நாடு இதுவரை கூறி வந்தது என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்துள்ளார். இணையதளம் ஒன்றில் அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஸாரப் ஆட்சியில் இருந்த காலத்தில்தான் அபோட்டாபாத்தில் பின்லேடன் தங்கியிருந்த கட்டிடம் கட்டப்பட்டது. கடந்த 2001 ல் நடைபெற்ற ஆக்ரா உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த அவரும் தாவூத் இப்ராகிம் பற்றி இதே பொய்யைத்தான் கூறினார். 

தாவூத்தை இந்தியாவிடம் ஒப்படைப்பது பற்றி அவரிடம் அப்போதைய பிரதமர் வாஜ்பாய் கோரிய போது, முஷாரப்பின் முகம் மாறியது. பாகிஸ்தானில் அவர் இல்லை என மறுத்தார். ஆனஆனால் அவருடன் வந்திருந்த அந்நாட்டு அதிகாரி ஒருவர் தாவூத்தின் இருப்பிடம் பற்றி முஷாரப் கூறுவது பொய் என்று பின்னர் என்னிடம் தெரிவித்தார் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்