முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பள்ளி விடுதி மாணவிகளை கற்பழித்த வார்டன் கைது

வியாழக்கிழமை, 29 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

இட்டாநகர், ஆக.29 - அருணாசலப்பிரதேசத்தில் தனியார் பள்ளி விடுதி மாணவிகளை அந்த பள்ளி விடுதி வார்டனே கற்பழித்த கொடுமை நடந்துள்ளது. இது மக்களை மேலும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அருணாசலப்பிரதேசத்தில் உள்ள சியாங் மாவட்டத்தில் தனியார் பள்ளி உள்ளது. இதில் உள்ள விடுதியில் தங்கி மாணவிகள் படித்து வந்தனர். ஆனால் அவர்களை அதே பள்ளி வார்டன் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக கற்பழித்து வந்துள்ளார். இதுபற்றி யாரிடமாவது கூறினால் உங்களைக் கொன்றுவிடுவேன் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த மாணவிகள் இதுபற்றி பள்ளி முதல்வரிடம் கூறியுள்ளனர். ஆனால் அவர் அதை கண்டுகொள்ளவில்லை. 

இதனால் வெறுப்படைந்த மாணவிகள் தைரியத்தை வரவழைத்து பள்ளி சுற்றுச்சவரை தாண்டி வெளியே வந்து காவல் நிலையத்தில் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் தெரிவித்தனர். இதுபற்றி மாணவிகள் கூறியதாவது:

எங்கள் பள்ளி விடுதியில் வார்டனாக விபின் விஸ்வன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் எங்களை கற்பழித்தார். இதுபற்றி வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டினார். இவர் 14 மாணவிகளை கற்பழித்துள்ளார். அந்த பிஞ்சுகளுக்கு வயது 5 முதல் 14 வரை ஆகும். போலீஸார் விசாரணை நடத்தி இவரை கைது செய்தனர்.  மேலும் பள்ளி முதல்வரையும், வேறு இருவரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதையடுத்து இந்த பகுதியில் வசிப்பவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். வார்டனுக்கு தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்