எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நகரி, ஆக. 29 - தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து ஐக்கிய ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்றும் ஆந்திரா மற்றும் ராயல சீமா பகுதியில் கடந்த 1 மாதமாக முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் போராட்டத்தை தேசிய அளவில் தெரியப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய ஆந்திரா போராட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து திருப்பதியில் 2 நாள் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பதியில் தற்போது தனியார் வாகனங்கள் இயங்குகின்றன.
இந்த போராட்டத்தின் மூலம் எல்லா வாகனங்களையும் தடுத்து நிறுத்துவது, திருப்பதி நகரத்தையே ஸ்தம்பிக்க வைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் சால்மன் ஆரோக்கிய ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகர் பாபு ஆகியோர் போராட்ட குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் தனியார் வாகனங்களை திருச்சானூர் சர்க்கிள், சொலோ பள்ளி, விலங்கியல் பூங்கா வழியாக திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரிக்கு அனுமதிப்பது என்றும் அங்கிருந்து திருமலைக்கு செல்வார்கள் என்றும் போராட்டக்குழுவினர் தெரிவித்தனர். மற்ற இடங்களில் எல்லாம் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.
போராட்டம் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வரவேண்டாம் என்றும், தனியார் உணவகங்கள் அனைத்தும் மூடப்பட உள்ளதால் பக்தர்கள் அவதிப்பட நேரிடும் என்றும் தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால் அதை மீறி கிருஷ்ண ஜெயந்தியையொட்டி ஏராளமான பக்தர்கள் 2 நாட்களுக்கு முன்பே திருமலையில் குவிந்தனர். இதற்கிடையே போராட்டக் குழுவினர் அறிவித்தபடி திருப்பதி நகரத்தில் முற்றுகை போராட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவே தொடங்கியது. இதனால் திருப்பதியில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், தனியார் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை. பள்ளிகள், கல்லூரிகள் இயங்கவில்லை. அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள் யாரும் வேலைக்கு செல்லவில்லை. மருத்துவமனைகள், வங்கிகளும் செயல்படவில்லை.
அதையும் மீறி நகருக்குள் நுழைந்த வாகனங்களை போராட்டக்குழுவினர் முற்றுகையிட்டனர். இதனால் திருப்பதி மற்றும் திருமலை முழுவதும் ஸ்தம்பித்தது. திருப்பதியில் நேற்று ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. வாகன போக்குவரத்து நடை பெறாததால் மணமக்கள் மற்றும் உறவினர்கள் கீழ்திருப்பதியிலேயே தவித்தனர். கிருஷ்ணஜெயந்தி பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் திருமலையிலேயே தவித்தனர்.
திருப்பதி அலிபிரியில் இருந்து திருமலைக்கு முன்பு தினமும் 1500 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் நேற்று தேவஸ்தானத்துக்கு சொந்தமான 60 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் பஸ் கிடைக்காமல் அவதிப்பட்டனர். திருப்பதி ரெயில் நிலையத்தில் இருந்து அலிபிரிக்கு தேவஸ்தானம் சார்பில் 15 பஸ்கள் மட்டும் இயக்கப்படுகிறது. ஓட்டல்கள் மூடப்பட்டு கிடப்பதால் ரெயில்களில் இருந்து வந்து பஸ்களில் ஏறும் பயணிகளுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அதே போல் திருப்பதி விமான நிலையத்தில் இருந்து அலிபிரிக்கு தேவஸ்தானம் சார்பில் ஓரிரு பஸ்கள் மட்டுமே விடப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் கடுமையான திண்டாட்டத்திற்கு உள்ளானார்கள்.
குழந்தைகளை ஜன்னல் வழியாக உள்ளே தூக்கி போட்டு பஸ்களில் இடம் பிடித்தனர். திருப்பதி முழுக்க ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதால் உணவு கிடைக்காமல் திண்டாடினர். அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் நடத்தப்படும் இலவச அன்னதான கூடத்தில் மட்டுமே உணவு வழங்கப்பட்டது. இன்னும் ஏராளமான பக்தர்கள் வீடு திரும்ப முடியாமல் திருமலையிலேயே தவித்த வண்ணம் உள்ளனர். சொந்த வாகனங்களில் செல்வோர் மட்டும் போராட்டக்குழுவினர் அறிவித்த சாலை வழியாக திருமலைக்கு செல்கிறார்கள்.
நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கிய இந்த போராட்டம் இன்று நள்ளிரவு வரை நீடிக்கும் என்பதால் திருப்பதி முற்றிலும் முடங்கி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.