முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிபதிகள் மீது பிரதமர் அலுவலகம் குற்றச்சாட்டு

வெள்ளிக்கிழமை, 30 ஆகஸ்ட் 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஆக. 31 - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஊழல் தொடர்பான ஆவணங்களை பொதுமக்கள் கோருவதற்கு தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்டோர் எடுக்கும் முடிவுகளே காரணம் என்று பிரதமர் அலுவலகம் புகார் தெரிவித்துள்ளது. பிரதமர் அலுவலகம் அளித்துள்ள புகாரில், மிகவும் முக்கியமானதும், ரகசியமாக வைக்கப்பட வேண்டிய விவரங்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொதுமக்கள் பெற்று விடுகின்றனர். இதற்கு காரணம் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம், முன்னாள் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் மற்றும் அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி ஆகியோர்தான். இவர்கள் எடுக்கும் தன்னிச்சையான முடிவுகள், பல்வேறு ஊழல் தொடர்பான ஆவணங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மக்கள் கோருவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்