முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிரவாத பயிற்சி: யாசின் ஒப்புதல் வாக்குமூலம்

சனிக்கிழமை, 31 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 1 - இந்தியாவில் 100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்துள்ளதாக சிக்கிய இந்திய முஜாஹிதீன் இயக்கத்தின் யாசின் பட்கல் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்தியாவில் 40 க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய பட்கலிடம் காவல்துறையினர் நேற்று முன்தினம் 3 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்துவதற்கு முன்பாக நடந்த இந்த விசாரணையில் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியதாக பட்கல் கூறியுள்ளார்.

இந்தியாவில் சுமார் 100 பேருக்கு தீவிரவாத பயிற்சி அளித்ததாகவும் இதற்காகவே தாம் நேபாளத்தில் 6 மாதம் தங்கியிருந்ததாகவும் அந்த வாக்குமூலத்தில் பட்கல் கூறியிருக்கிறார். அதே நேரத்தில் புத்த கயாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தங்களுக்கு தொடர்பில்லை என்று பட்கல் தெரிவித்திருக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்