முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் தொடர் நடக்குமா?

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புதுடெல்லி,செப். 3 -  இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெ ட் தொடர்  நடக்குமா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 

இவர் ஏற்கனவே ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். 

டிசம்பர் மாதம் தென் ஆப்பிரிக்கா அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட திட்டமிட்டு உள்ளது. அப்போது 200 -வது டெஸ்ட் போட்டி யில் சச்சின் கலந்து கொண்டு ஆடுவார் என்றும் அதன் பிறகு அவர் ஓய்வு பெறு வார் என்றும் தகவல்கள் வெலியாகி யிருந்தன. 

இந்நிலையில் நவம்பர் மாதம் மே.இ.தீவு அணியை இந்தியாவுக்கு வரவழை த்து 2 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போ    ட்டிகளில் பங்கேற்க வைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 

இந்த டெஸ்ட் தொடர் கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெற வாய்ப்பு இருக்கிறது. மும்பை டெண்டுல்க ரின் சொந்த ஊராகும். 

உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் 200 -வது டெஸ்ட் போட்டியில் விளையா டி டெ ண்டுல்கர் ஓய்வை அறிவிப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

இந்த தொடரை மே.இ.தீவு அணி ஏற் றுக் கொள்ளும் பட்சத்தில் போட்டிக் கான இடம் தேர்வு செய்யப்படும் என் று தெரிய வருகிறது. 

இதற்கிடையே ஆண்டு இறுதியில் இந் திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக் காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள் ளும்  என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. 

நவம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 19 -ம் தேதி வரை 3 டெஸ்ட், 7 ஒரு நாள் போட்டி மற்றும் இரண்டு டி - 20 போ  ட்டிகளில் விளையாடும் என்று தெ. ஆ. கிரிக்கெட் வாரியம் அட்டவனை வெ ளியிட்டுள்ளது. 

ஆனால் இந்த அட்டவனையை இந்தி யாவின் ஒப்புதல் இல்லாமல் தெ.ஆ. கிரிக்கெட் வாரியம் வெளியிட்டதாக  கூறப்படுகிறது. 

நவம்பர் மாதம் மே.இ.தீவு அணி இந் தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள் ளும் பட்சத்தில், இந்தியாவின் தெ.ஆ. சுற்றுப் பயணம் நடக்குமா என்ற சந் தேகம் ஏற்பட்டுள்ளது. 

இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ஸ்ரீநிவாசன் கூறுகையில், தெ ன் ஆப்ரிரிக்கா கொடர் ரத்து செய்யப் பட்டுவிட்டதாக நான் கூற மாட்டேன். அது நிச்சயமாக நடைபெறும். அதற்கு முன்பாக, மே.இ. தீவுடன் போட்டி யை நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றார். 

ஏற்கனவே தெ. ஆ. கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள அட்டவனை மாற்றி அமைக்கப்படும் என்று தெரிகிறது. அதன்படி 2 டெஸ்ட் 3 ஒரு நாள் போட்டி இரண்டு டி -20 போட்டிகள் நடத்த இந்தியா பரிந்துரை செய்யும் என்று தெரி கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்