எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புது டெல்லி, செப். 3 - தனித் தெலுங்கானா மாநிலத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும், ஒன்றுபட்ட ஆந்திரா கோரியும் பாராளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்ட 4 தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்களும், 5 காங்கிரஸ் எம்.பி.க்களும் ஆக மொத்தம் 9 ஆந்திர எம்.பி.க்களை சபாநாயகர் மீராகுமார் நேற்று மீண்டும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இவர்கள் மீதியுள்ள 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவது இந்த கூட்டத் தொடரில் இது 2 வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர மாநிலத்தை 2 ஆக பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது. இதற்கான அறிவிப்பு பாராளுமன்ற கூட்டத் தொடர் முடிந்த பிறகு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தெலுங்கானா மாநிலம் அமைவதற்கு ஆந்திர மாநிலத்தில் உள்ள கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் இந்த பகுதிகளை சேர்ந்த அரசு ஊழியர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் ஆந்திராவில் நிர்வாகமே தற்போது ஸ்தம்பித்துப் போய் கிடக்கிறது.
இந்த நிலையில் பாராளுமன்றம் நேற்று 2 நாள் விடுமுறைக்கு பிறகு மீண்டும் கூடியது. லோக்சபை கூடியதும் தெலுங்கு தேசம் எம்.பி.க்களான என். கிரிஷ்டப்பா, வேணுகோபால்ரெட்டி, கே.என். ராவ் மற்றும் சிவபிரசாத் ஆகியோர் சபையின் மையப் பகுதிக்கு சென்று தெலுங்கானா அமைவதற்கு எதிராக தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். இவர்களில் ஒருவரான சிவபிரசாத் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் முகமுடியை எடுத்து அணிந்து கொண்டு ஒன்றுபட்ட ஆந்திராவுக்கு ஆதரவாகவும், தெலுங்கானாவுக்கு எதிராகவும் கோஷமிட்டார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
இதே போல ஆந்திராவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களான சாய் பிரதாப், அனந்த வெங்கட்ராமி ரெட்டி, ராஜகோபால், மகுந்தா ஸ்ரீநிவாசலு ரெட்டி மற்றும் பாபிராஜூ ஆகியோர் சபையின் மையப் பகுதிக்கு சென்று கையில் பதாகைகளை ஏந்திக் கொண்டு நாங்கள் ஒன்றுபட்ட ஆந்திராவையே விரும்புகிறோம் என்று உரத்த குரலில் கோஷமிட்டனர். எங்களுக்கு நீதி வேண்டும் என்றும் இவர்கள் கோஷமிட்டனர். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது.
சிவபிரசாத் முகமுடி அணிந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சில காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தெலுங்குதேசம் எம்.பி.க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்களும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து சபாநாயகர் மீராகுமார் தனது பிரத்யேக அதிகாரத்தை பயன்படுத்தி அமளியில் ஈடுபட்ட மேற்கண்ட 9 எம்.பி.க்களையும் 374- ஏ விதியின் கீழ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இதையடுத்து இந்த மழைக்கால கூட்டத் தொடரின் மீதியுள்ள 5 நாட்களுக்கு இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருப்பதால் இவர்கள் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள இயலாது. இவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பிறகு சபையை பிற்பகல் 2 மணி வரை ஒத்தி வைத்து உத்தரவிட்டார் சபாநாயகர் மீராகுமார்.
ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் 23 ம் தேதி 12 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அந்த 12 பேரில் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்ட 9 எம்.பி.க்களும் அடங்குவர். ஆக, ஒரே கூட்டத் தொடரில் 2 வது முறையாக எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த அதிரடி நடவடிக்கையை சபாநாயகர் மீராகுமார் எடுத்துள்ளார். ஏற்கனவே இது போன்ற நடவடிக்கையை எடுத்த போது மனமில்லாமல் தான் அந்த முடிவை எடுத்ததாக சபாநாயகர் கூறியிருந்தார். மேலும் பாதுகாப்பு கருதியும் அவ்வாறு செய்ததாக அவர் கூறியிருந்தார். காரணம் சபைக்குள் ஆபத்தான பொருட்களை இவர்கள் கொண்டு வரக் கூடும் என்ற தகவல் கிடைத்ததையடுத்து சபாநாயகர் இந்த நடவடிக்கையை எடுத்ததாகவும் செய்திகள் வெளியாயின. இந்த சூழ்நிலையில்தான் நேற்று மீண்டும் 9 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த