முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிறுவனங்கள் சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் ஒப்புதல்

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, செப். 4 - நிறுவனங்கள் சட்டத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். நாட்டில் 60 ஆண்டுகளாக இருந்து வந்த நிறுவனங்கள் சட்டத்துக்குப் பதிலாக, புதிய மதோதாவை மத்திய அரசு கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து இச்சட்டம் குறித்த அறிவிக்கை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது என்று மத்திய நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான புதிய நெறிமுறைகள் புதிய சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. முன்னதாக, இந்த மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மக்களவையில் நிறைவேறியது 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்