முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். சூதாட்டம்: ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

செவ்வாய்க்கிழமை, 3 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

புது டெல்லி, செப். 4  - ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் அஜீத் சாண்டிலா உள்ளிட்ட 9 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 5 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். சூதாட்டத்தில் ்ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சாண்டிலா மற்றும் சூதாட்டத் தரகர்கள் உள்ளிட்ட 9 பேர் ஜாமீன் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களின் மீதான தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தர்மேஷ் சர்மா தெரிவித்திருந்தார். இந்த வழக்கு தொடர்பாக டெல்லி போலீஸின் சிறப்பு பிரிவிடமும், எதிர்தரப்பு வழக்குரைஞர்களிடமும் சில தகவல்கள் குறித்து ஆலோசிக்க வேண்டியுள்ளது. எனவே, மனுக்கள் மீதான தீர்ப்பை வரும் 5 ம் தேதி ஒத்தி வைப்பதாகா சர்மா தெரிவித்தார். முன்னதாக, ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 39 பேரின் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அதில் 21 பேர், தற்போது ஜாமீனில் வெளிவிடப்பட்டுள்ளனர்; 9 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; 9 பேரும் தலைமறைவாக உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago