முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திர காங்., அமைச்சர்கள் சோனியாவின் வளர்ப்பு நாய்கள்

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

நகரி, செப்.4 -  ஆந்திர காங்கிரஸ் அமைச்சர்கள்,சோனியாவின் வளர்ப்பு நாய்கள் என்று சந்திரபாபு நாயுடு கூறினார். குண்டூர் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியதாவது: சோனியா காந்தித்கு தெலுங்கு மக்களைப் பற்றித் தெரியாது. என்.டி. ராமராவை பதவி இறக்கும்போது என்ன நடந்தது என்பது இந்திரா காந்திக்கு தெரியும். அதனை சோனியா காந்திக்குக் காட்ட வேண்டும். ஆந்திர காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஏன், முதல் அமைச்சர் கிரண்குமார் ரெட்டி கூட  சோனியாவின் வளர்ப்பு நாய்களாக அவரது காலடியில் கிடக்கிறார்கள். இங்கு ராஜினாமா செய்வதுபோல் பேசிவிட்டு அங்கு டெல்லியில் சோனியா காந்தியின் காலடியில் வாலாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 

பிரதமர் மன்மோகன்சிங் கூட அப்படி மாறிவிட்டார். சோனியாவை பணத்தாசை பிடித்து ஆட்டுகிறது. அவரது மக்கு மகனை பிரதமராக்க முயற்சிக்கிறார். அதேபோல் இங்கு விஜயலெட்சுமியின் மகனும் பண பைத்தியமாகி விட்டார். ஜெகன்மோகன் ஒரு பொருளாதார தீவிரவாதி. தெலுங்கு மக்களிடம் அவர்கள் நாடகமாடுகிறார்கள் என்றார்.

சந்கிரபாபு நாயுடு பேச்சுக்கு ஆந்திர அமைச்சர் கொண்டு முரளி கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் பிரதிநிதிகளை நாய்கள் என்று கூறுவதா என்று கண்டித்த அவர் நாங்கள் நாய் என்றால், நீ குள்ள நரி. தன்னைச் சுற்றி ஐந்தாயிரம் குள்ள நரிகளை வைத்துக்கொண்டு சந்திரபாபு நாயுடு யாத்திரை வருகிறார். தனியாகச் சென்றால் தெலுங்கு மக்கள் செருப்பால் அடித்து பூஜை செய்வார்கள். சோனியாவை பணத்தாசை பிடித்தவர் என்று கூறுகிறார். 2 ஏக்கர் நிலம் வைத்திருந்தவர் இப்போது 20 ஆயிரம் கோடிக்கு அதிபதி ஆகியுள்ளது எப்படி?. இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தத் தயாரா என்று அவர் கடுமையாக்க் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்