முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல்

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.4 - இந்கிய நிலைகள் மீது பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அதற்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். போர் மறுப்பு ஒப்பந்தத்தை மீறி இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.        

தோடா என்ற இடத்தில் நேற்று பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர்.

இந்தியா மீது பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த மாதம் மட்டும் 16 முறை தாக்குதல் நட்ததியது. பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் இறந்தனர். ஆனால் பாகிஸ்தான் இதை ஏற்க மறுத்துவிட்டது. இந்திய ராணுவம் தாக்கியதில் பாகிஸ்தான் அதிகாரி ஒருவர் காயமடைந்தார் என்றும் அபாண்டமாக பொய் கூறியது. ராணுவ உடையில் வந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் தாக்குதல் நடத்தியது பாகிஸ்தான் ராணுவம் என்பது மட்டும் உண்மை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்