முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலங்கானா: 20 நாளில் அமைச்சரவைக் குறிப்பு தயாராகும்

புதன்கிழமை, 4 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, செப். 4 - அடுத்த 20 நாள்களில் தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான மத்திய அமைச்சரவைக் குறிப்பு தயாராகும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டே கூறினார்.இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுஷீல் குமார் ஷிண்டே, தெலங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான வரைவு குறிப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது. அதை மத்திய சட்டத் துறை சரி பார்த்துத் தேவையான திருத்தங்களைச் செய்ததும் அடுத்த 20 நாள்களில் அக்குறிப்பு மீது மத்திய அமைச்சரவை விவாதம் நடத்தும் என்றார். மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதும் தெலங்கானா தனி மாநில உருவாக்கம் குறித்து மத்திய அமைச்சர்கள் குழு ஆராயும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழுவுக்கு பாதுகாப்புத் துறை ஏ.கே. அந்தோனி தலைமை தாங்குவார் என்றும் அக்குழு தனி மாநிலம் அமைக்க சட்டப்பூர்வ நடைமுறைகளை உருவாக்கும் பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிகிறது. மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதும் ஆந்திர சட்டப்பேரவையில் தனி மாநிலம் அமைக்கும் தீர்மானத்தை நிறைவேற்ற அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். அந்தத் தீர்மானம் மத்திய அரசு மூலம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அதன் பிறகு ஜனாதிபதி அனுமதியுடன் தனி மாநிலத்தை உருவாக்கும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.

​​​​​​​

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்