முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் பயங்கரவாதிகள் குண்டு வீச்சு: 18 பேர் சாவு

வியாழக்கிழமை, 5 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

பாக்தாத், செப்.6 - ஈராக்கில் பயங்கரவாதிகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் ஷியா பிரிவை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தனர். இராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. தலைநகர் பாக்தாத்தின் தென் பகுதியில் 40 கி.மீ. தூரத்தில் உள்ள லடிபியா நகரில் ஷியா பிரிவைச் சேர்ந்த முஸ்லிம்கள் வசித்து வருகிறார்கள. 

இந்நிலையில் பயங்கரவாதிகள் லடிபியா நகரில் 2 ஷியா பிரிவு முஸ்லிம் சகோதரர்களின் வீடுகள் மீது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 2 வீடுகளும் இடிந்து தரை மட்டமாயின. இடிபாடுகளில் சிக்கி 6 குழந்தைகள், 5 பெண்கள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்