முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக்.,க்கு எதிராக சச்சினின் கடைசி டெஸ்ட்: அக்ரம் நம்பிக்கை

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

கராச்சி,செப்,14 - சச்சின் டெண்டுல்கர், தனது கடைசி டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாடுவார் என்று நம்புவதாக அந்த அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் கராச்சியில் 1989-ம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் சச்சின் அறிமுகமானார். அப்போட்டியின் முதல் இன்னிங்சில் 15 ரன் எடுத்தார். இரதண்டாவது இன்னிங்ஸில் பேட் செய்யவில்லை. அந்த டெஸ்டில் வாசிம் அக்ரமும் இடம் பிடித்திருந்தார். 

இதை கருத்தில் கொண்டே பாகிஸ்தானுக்கு எதிராக தனது டெஸ்ட் போட்டியில் சச்சின் விளையாடுவார் என்று அக்ரம் தெரிவித்துள்ளார். அந்த போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் நடைபெறவேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அந்த டெஸ்டில் சச்சினை சிறப்பாக வழியனுப்ப வேண்டும். அதுதான் சிறந்த வழியனுப்புதலாக இருக்கும் என்றும் அக்ரம் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த தென் ஆப்பிரிக்க தொடரை ரத்து செய்து விட்டு பாகிஸ்தான் அணியை அழைக்க இந்திய தரப்பு திட்டமிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதைக் கருதியே அக்ரம் இவ்வாறு கூறியதாக தெரிகிறது. தற்போது சச்சின் மேற்கிந்திய தீவுகள் தொடரில் 200-வது டெஸ்ட் சாதனை புரிய உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்