முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெக்சிகோவில் சூறாவளி 33 பேர் பரிதாப சாவு

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

வேராக்குஸ், செப். 18 - மெக்ஸிகோ நாட்டின் பசிபிக் மற்றும் வளைகுடா  கடலோர பகுதிகளில் வீசிய சூறாவளிக்கு 33 பேர் உயிரிழந்தனர்.

சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ப்ல்வேறு நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலியானதாக அதன் ஆளுனர் கூறினார். அங்குள்ள அல்டோடோங்கா நகரில் சென்று கொண்டிருந்த பஸ் அப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியதில் அவர்கள் இறந்தனர். இந்த மாகாணத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர். அவர்களில் 9 ஆயிரம் பேர் அவசர கால முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்