முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அயோத்தி பிரச்சனைக்கு கோர்ட் மூலம் தீர்வு காண முடியாது

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

சேலம் மே.12​ - அயோத்தி பிரச்சனைக்கு கோர்ட் மூலம் தீர்வு காண முடியாது என சேலத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் தெரிவித்துள்ளார். சேலம் மரவனேரியில் உள்ள காஞ்சி மடத்திற்கு ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் நேற்று காலை வருகை தந்தார். பின்னர் அவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். அதைத்தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது.அயோத்தி பிரச்சனைக்கு கோர்ட் மூலம் தீர்வு காணமுடியாது. பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும்.இதில் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இது தொடர்பாக வரும் 14 ந் தேதி பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள நான் டெல்லி செல்கிறேன். இந்த பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காணப்படும். மேலும் தமிழகத்தில் உள்ள கோவில்களில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டு, சிறப்பு nullஜைகள் எல்லாம் நடத்தப்படுகின்றன.

முஸ்லீம் மதத்தில் உள்ள வக்புவாரியம் தன்னிச்சையாக செயல்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை மட்டும் அரசு கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதை மறுசீரமைப்பு செய்து ஓய்வு பெற்று ஐ.ஏ.எஸ்.அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும், அதே போல் பக்தி மார்க்கத்தில் ஆர்வம் உள்ள ஒருவரையும் நியமித்து செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்