முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாக். எல்லையில் இந்திய மீனவர்கள் 58 பேர் கைது

சனிக்கிழமை, 21 செப்டம்பர் 2013      இந்தியா
Image Unavailable

 

கராச்சி, செப். 22 - பாகிஸ்தான் நாட்டு கடல் எல்லையில் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் இந்திய மீனவர்கள் 58 பேரை அந்நாட்டு கடலோர பாதுகாப்பு படை கைது செய்துள்ளது. இது குறித்து அதன் செய்தி தொடர்பாளர் முகமது பாரூக் கூறுகையில், 

எங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 58 பேரை கைது செய்துள்ளோம். அவர்களின் 9 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளோம். கடந்த மாதம் நல்லெண்ண அடிப்படையில் சிறையில் இருந்த இந்திய மீனவர்கள் 337 பேரை பாகிஸ்தான் அரசு விடுவித்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே கராச்சி சிறையில் 97 மீனவர்கள் உட்பட 100 இந்தியர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்