முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசுக்கு இழப்பு: ராம்தேவ் அறக்கட்டளை மீது குற்றச்சாட்டு

திங்கட்கிழமை, 23 செப்டம்பர் 2013      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, செப்.24 - தகுதியில்லாத தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வரிச் சலுகை அளித்தன் மூலம் மத்திய அரசுக்கு  ரூ.3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது  என்று மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கல்வி. சுகாதாரம் மதம் போன்ற பல துறை சேவைகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. அவை வெளிநாடுகளிலிருந்து பெறும் நன்கொடைகளுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அரசிடம் பதிவுபெற்ற 6 லட்சம் நிறுவனங்களில்  80 ஆயிரம் பெரிய நிறுவனங்க வருமான வரி விலக்கு பெற்றுள்ளன.இதை மத்திய கணக்கு தணிக்கை துறை தணிக்கை செய்து அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 10 ஆண்டுகளில் வருமான வரி விலக்கு பெற்ற நிறுவனங்களின்  கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட வரிச்சலுகை மூலம் மத்திய அரசுக்கு ரூ. 3 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2009-2010-ம் ஆண்டில் பல நிறுவனங்கள் பெற்ற நன்கொடைகள்ஏ முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாபா ராம்தேவ் அறக்கட்டளை பெற்ற நன்கொடை மூலம் ஏராளமான சொத்துகள் வாங்கிக் குவிக்கப்பட்டுள்ளன. முறைகேடாகப் பயன்படுத்தப்படும் நன்கொடைகள் மீது அரசு வரி விதிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

         

     

           

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்