முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி - பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

வியாழக்கிழமை, 12 மே 2011      விளையாட்டு
Image Unavailable

 

மொகாலி, மே. 12 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 76 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்தது. 

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், பேட்டிங்கின் போது, மார்ஷ், கேப்டன் கில்கிறிஸ்ட் மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். வல்தாட்டி அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார். 

பின்பு பெளலிங்கின் போது, பார்கவ் பாட் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீன் குமார், பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் அவருக்கு ஆதவரவாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் சண்டிகாரில் மொகாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் 54 - வது லீக் ஆட்டம் நடந்த து. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில், வல்தாட்டி மற் றும் கேப்டன் கில்கிறிஸ்ட் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

பஞ்சாப் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் டை இழந்து 163 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை எட்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர். 

3 - வது வீரராக இறங்கிய ஷான் மார்ஷ் அதிகபட்சமாக, 34 பந்தில் 43 ரன்னை எடுத்தார். இதில், 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் முனாப் படேல் வீசிய பந்தில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார். 

அடுத்தபடியாக, கார்த்திக் 24 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் கில்கிறிஸ்ட் 28 பந்தில் 28 ரன்னையும், துவக்க வீரர் வல்தாட்டி 14 ரன்னையும் எடுத்த னர். 

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், முனாப் படேல் அபாரமாக பந்து வீசினார். அவர் 21 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங்கா 2 விக்கெட் எடுத்தார். சுமன், பொல்லார்டு மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 

மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இற ங்கிய அந்த அணி 12.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 87 ரன்னில் சுருண்டது. 

இதனால் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில் 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. இந்தவெற்றி அந்த அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. 

மும்பை அணி தரப்பில், ஒரு வீரர் கூட கால் சதத்தை தாண்டவில்லை. 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். அந்த அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு முக்கிய காரணமா கும். 

பொல்லார்டு அதிகபட்சமாக 11 பந்தில் 17 ரன்னை எடுத்தார். தவிர, பிளிஜ்சார்டு 10 பந்தில் 15 ரன்னையும், கீப்பர் ராயுடு 19 பந்தில் 13 ரன் னையும், ஹர்பஜன் சிங் 7 பந்தில் 12 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் டெண்டுல்கர் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

பஞ்சாப் அணி சார்பில், பார்கவ் பாட் அமர்க்களமாக பந்து வீசி 22 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்ட நாயகனாக பாட் தேர்வு செய்யப்பட்டார்.   ஐ.பி.எல். போட்டி ​ -  பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி

மொகாலி, மே. 12 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 76 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்தது. 

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், பேட்டிங்கின் போது, மார்ஷ், கேப்டன் கில்கிறிஸ்ட் மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். வல்தாட்டி அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார். 

பின்பு பெளலிங்கின் போது, பார்கவ் பாட் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீன் குமார், பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் அவருக்கு ஆதவரவாக பந்து வீசினர். 

ஐ.பி.எல். டி - 20 போட்டியில் சண்டிகாரில் மொகாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் 54 - வது லீக் ஆட்டம் நடந்த து. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. 

முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில், வல்தாட்டி மற் றும் கேப்டன் கில்கிறிஸ்ட் இருவரும் ஆட்டத்தை துவக்கினர். 

பஞ்சாப் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் டை இழந்து 163 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை எட்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர். 

3 - வது வீரராக இறங்கிய ஷான் மார்ஷ் அதிகபட்சமாக, 34 பந்தில் 43 ரன்னை எடுத்தார். இதில், 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் முனாப் படேல் வீசிய பந்தில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார். 

அடுத்தபடியாக, கார்த்திக் 24 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் கில்கிறிஸ்ட் 28 பந்தில் 28 ரன்னையும், துவக்க வீரர் வல்தாட்டி 14 ரன்னையும் எடுத்த னர். 

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், முனாப் படேல் அபாரமாக பந்து வீசினார். அவர் 21 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங்கா 2 விக்கெட் எடுத்தார். சுமன், பொல்லார்டு மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை. 

மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இற ங்கிய அந்த அணி 12.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 87 ரன்னில் சுருண்டது. 

இதனால் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில் 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. இந்தவெற்றி அந்த அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது. 

மும்பை அணி தரப்பில், ஒரு வீரர் கூட கால் சதத்தை தாண்டவில்லை. 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். அந்த அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு முக்கிய காரணமா கும். 

பொல்லார்டு அதிகபட்சமாக 11 பந்தில் 17 ரன்னை எடுத்தார். தவிர, பிளிஜ்சார்டு 10 பந்தில் 15 ரன்னையும், கீப்பர் ராயுடு 19 பந்தில் 13 ரன் னையும், ஹர்பஜன் சிங் 7 பந்தில் 12 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் டெண்டுல்கர் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். 

பஞ்சாப் அணி சார்பில், பார்கவ் பாட் அமர்க்களமாக பந்து வீசி 22 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்ட நாயகனாக பாட் தேர்வு செய்யப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்