முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைரோபி காம்ப்ளக்சில் தொடர்ந்து நடக்கும் சண்டை

செவ்வாய்க்கிழமை, 24 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

நைரோபி, செப். 25 - கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் உள்ள ஷாப்பிங் காம்ப்ளக்சில் தீவிரவாதிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருவதாக கூறப்படுகிறது. 

கென்யா நாட்டின் தலைநகர் நைரோபி. இங்குள்ள ஷாப்பிங் வணிக வளாகத்தில் 3 தினங்களுக்கு முன்பு புகுந்த சோமாலியா நாட்டு தீவிரவாதிகள் அங்கிருந்தவர்களை ஈவு இரக்கமின்றி தானியங்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இந்த கொடூர தாக்குதலில் 2 இந்தியர்கள் உட்பட இதுவரை 60 க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டார்கள். 

இந்த சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் கென்யா நாட்டு படையினர் அந்த வணிக வளாகத்தை சுற்றி வளைத்து கடுமையான போராட்டத்துக்கு பிறகு தீவிரவாதிகளின் பிடியில் இருந்த பிணைக் கைதிகளை மீட்டனர். மேலும் அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். இதையடுத்து அந்த வணிக வளாகம் அரசு படையின் கட்டுப்பாட்டில் வந்ததாக கூறப்பட்டது. ஆனால் திடீரென்று அந்த ஷாப்பிங் காம்ப்ளக்சின் மேல் தளத்தில் பதுங்கியிருந்த சில தீவிரவாதிகள் அரசு படையினரை நோக்கி சுட ஆரம்பித்தனர். இதனால் அதிர்ந்து போன அதிரடி படையினர் மீண்டும் அவர்களை நோக்கி சுட்டனர். இப்படியாக அந்த வளாகத்தில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. சோமாலியாவில் இருந்து கென்ய படைகள் வெளியேற வேண்டும் என்பதை வலியுறுத்தியே நைரோபியில் தீவிரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தினார்களாம். இருப்பினும் அவர்களை ஒழித்துக் கட்டுவது என்பதில் கென்ய படை உறுதியாக உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்