முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் கார் குண்டு வெடித்து 30 பேர் பலி

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

டமாஸ்கஸ்,செப்.29 - சிரியாவில் மசூதி அருகே கார் குண்டு வெடித்ததில் 30 பேர் உடல் சிதறி பலியாயினர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆஜாத்திற்கு எதிராக 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. போராட்டக்காரர்களில் ஒரு லட்சத்துக்கு அதிகமானோர் கொல்லப்பட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியில் அந்நாட்டு ராணுவம் ரசாயண வெடிகுண்டுகளை வீசியதில் 1300 பேர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா, இங்கிலந்து உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டின. 

இது குறித்து ஐ.நா. அதிகாரிகள் விசாரணை நடத்தி ரசாயன ஆயுதங்களை பயன்படுதியதற்காஅன ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்தனர். இந்த சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் கார் குண்டு வெடித்ததில் 30 பேர் பலியாகி உள்ளனர்.  போராட்டக்காரர்கள் ஆயுதங்களை ஒப்படைத்து விடுமாறு அரசு வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த கார் குண்டு வெடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்