முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாரிய தலைவர் பதவிக்கு சீனிவாசன் போட்டியிட அனுமதி

சனிக்கிழமை, 28 செப்டம்பர் 2013      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி, செப்.29 _ சென்னையில் நடைபெற உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் தலைவர் பதவிக்கு சீனிவாசன் போட்டியிட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் தேர்தலில் வெற்றிபெற்றால் பதவி ஏற்கக் கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

சென்னையில் இன்று நடைபெறும் கிரிக்கெட் வாரிய பொதுக்குழு கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக சீனிவாசன் அறிவித்திருந்தார். இதற்கு தடை விதிக்கக் கோரி பீகார் கிரிக்கட் சங்கச் செயலாளர் ஆதித்ய வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த பட்நாயக், கேஹர் ஆகியோர் சீனிவாசன் போட்டியிட அனுமதி அளித்தனர்.  நாங்கள் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சீனிவாசன் பதவி ஏற்கக் கூடாது என்று அவர்கள்  தெரிவித்துள்ளனர்.இதையடுத்து நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சீனிவாசன் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்