முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விமான நிலையத்தில் இலங்கையை சேர்ந்த 3 பேர் கைது

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2013      தமிழகம்
Image Unavailable

சென்னை.அக்.1 இலங்கையை சேர்ந்தவர்கள் பாக்கிய நாதன் (33), சசிதரன் (26), மற்றும் ஜீவன்தாரா (19). சென்னையில் தங்கியிருந்த இவர்கள் மீண்டும் இலங்கை செல்ல மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தனர்

அப்போது, அவர்களின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் அவர்கள் குறிப்பிட்டிருந்ததை விட அதிக நாட்கள் சென்னையில் தங்கியிருந்ததும், அதற்காக போலி சான்றிதழ் தயாரித்து இருந்ததும் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரும் மீனம்பாக்கம் விமான நிலைய போலீசிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்