முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கி., பார்லிமென்ட் அருகே படகு தீப்பிடித்து எரிந்தது

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2013      உலகம்
Image Unavailable

 

லண்டன், அக்.1 - லண்டனில் பார்லிமென்ட் அருகே சுற்றுலா படகு தீப்பிடித்து எரிந்தது.  அதில் பயணம் செய்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தேம்ஸ் நதியில் பயணிகளுடன்  ஒரு படகு சென்றது. அதில் 30 பேர் இருந்தனர். அப்போது படகிலிருந்து புகை வரத் தொடங்கியது. திடீரென படகு தீப்பிடித்து எரியத் தொடங்கியது. உடனே பயணிகள் அலறினர். உடனடியாக மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்புப் படையினர் அங்கு சென்றனர். தீயை அணைக்கும்  படகும் அங்கு சென்றது. பின்னர் பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்