முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - பாக்., பேச்சு தொடர ஷெரீப்புக்கு பிரதமர் நிபந்தனை

திங்கட்கிழமை, 30 செப்டம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

நியூயார்க்., அக்.1 -பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் பயங்கரவாத செயல்களின் ஊற்றுக்கண்ணை கண்டறிந்து அதை அடைக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் மன்மோகன்சிங் கேட்டுக்கொண்டார். பயங்கரவாதச் செயல்களுக்குத் துணை போவதும், பயங்கரவாத அமைப்புகளுக்கு பயிற்சி, ஆயுத உதவி மற்றும் நிதி உதவி அளிப்பதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று மன்மோகன்சிங் கண்டிப்புடன் கூறினார். எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தால்தான் இரு நாடுகளுக்கிடையே பேச்சு வார்த்தை  தொடர முயற் சி மேற்கொள்ளப்படும் என்று மன்மோகன் நிபந்தனை விதித்தார். நவாஸ் ஷெரீப்பும், பிரதமர் மன்மோகன் சிங்கும் நியூயார்க்கில் சந்தித்துப் பேசினர்.

இவர்கள் இருவரும் முதல்தடவையாக இப்போதுதான் சந்தித்துப் பேசி உள்ளனர். அப்போது பயங்கரவாத பிரச்சனையை முன் வைத்தே மன்மோகன்சிங் பேசினார், இந்த சந்திப்பு நடைபெறுவதற்கு முன்பே பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்கள் இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வருவதை மன்மோகன்சிங் சுட்டிக்காட்டினார். 

பாகிஸ்தான் படையினர் எல்லை பாதுகாப்பு ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். பயங்கரவாத செயல்களைக் கட்டுப்படுத்த பாகிஸ்தான் உறுதியான நடவடிக்கைகைகளை எடுக்க வேண்டும் என்று அவர்கேட்டுக்கொண்டார்.

இந்த சந்திப்பின்போது இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், வெளியுறவுத் துறை செயலாளர் சுஜாதா சிங் ஆகியோர் பங்கேற்றனர். இந்த சந்திப்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவுகள் குறித்து இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன்  நிருபர்களிடம் கூறியதாவது: எல்லை பாதுகாப்பு ஒப்பந்தங்களை மீண்டும் கடைபிடிக்கும் வகையில் இரு நாட்டு ஜெனரல்கள் தெளிவான திட்டத்தை வகுக்க முடிவு செய்யப்பட்டது. மும்பை தாக்குதலில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக நவாஸ் ஷெரீப் கூறினார்.  பேச்சு வார்த்தை மூலம் எல்லைப் பகுதியில் அமைதி ஏற்பட்டிருப்பதை இரு நாட்டுத் தலைவர்களும்  ஒப்புக்கொண்டனர்.

 இந்தியாவிலிருந்து பயங்கரவாதம் பரப்பப்படுவதாக பாகிஸ்தான் வைத்த குற்றச்சாட்டை மன்மோகன்சிங் மறுத்தார் என்று சிவசங்கர் மேனன் கூறினார். பாகிஸ்தான் வெளியுறவு செயலர் அப்பாஸ் ஜிலானி கூறுகையில், நவாஸ், மன்மோகன் நடத்திய பேச்சு வார்த்தை பயனுள்ளகாக இருந்தது. அனைத்துப் பிரச்சனைகளையும் பேச்சுவார்த்தை மூலம் பேசி தீர்த்துக்கொள்ள இரு நாட்டுத் தலைவர்களும் ஒப்புக்கொண்டனர் என்றார், இந்த சந்திப்பு நடைநடைபெறும் முன்பாக  மன்மோகன்சிங்_குறித்து அந்நாட்டு பிரதமர்  பிரதமர் நவாஸ்

ஷெரீப் ,  அவதாறாக கருத்தி தெரிவித்ததாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.   இதுபோன்ற கருத்துகளை நவாஸ் ஷெரீப் தெரிவிக்கவில்லை என்று அதிகாரிகள் மறுப்பு தெரிவித்தனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago