முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு: லல்லு வழக்கறிஞர்

செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

ராஞ்சி, அக். 2 - நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என்று லல்லு பிரசாத் யாதவின் வழக்கறிஞர் சித்தரஞ்சன் சின்ஹா தெரிவித்தார்.

கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லல்லு பிரசாத் யாதவ் உட்பட45 பேர் குற்றவாளிகள் என்று ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இதையடுத்து லல்லு பிரசாத் யாதவ் ராஞ்சியில் உள்ள வீர்சா முண்டா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். லல்லு உள்ளிட்ட45 பேர்களுக்கான தண்டனை விபரம் நாளை3 ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் சிறைச்சாலையில் இருக்கும் லல்லுவை அவரது வழக்கறிஞர் சித்தரஞ்சன் சின்ஹா நேற்று சந்தித்தார். பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து லல்லு தரப்பில் அப்பீல் செய்யப்படும் என்று கூறினார். நேற்று கோர்ட் விடுமுறை என்பதால் அப்பீல் செய்ய முடியவில்லை என்றும் கோர்ட் விடுமுறைக்கு பிறகே மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்