எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆண்டிபட்டி,பிப்.23 - தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலினால் வழங்கப்பட்ட சுழல்நிதி கிடைக்கப்பெறாமல் மகளிர் சுய உதவிக்குழுவினர் புலம்பி வருகின்றனர்.பெருமளவில் திட்டங்களை சாதித்துவிட்டதாக மார்தட்டிக் கொள்ளும் திமுக அரசு கடந்த வருடங்களில் மூன்று முறை தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஸ்டாலினால் பல கோடி கடன் தொகை வழங்கி மகளிர் சுய உதவிக்குழுவிற்கு பெரியளவில் நலத்திட்டங்கள் வழங்கியதாக விளம்பரபடுத்திக்கொண்டனர்.உண்மையில் அனைத்தும் ஏட்டளவில் மட்டுமே இருப்பதால் ,சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மெல்லவும் முடியாமல்,விழுங்கவும் முடியாமல் மெளனித்து வருகிறார்கள்.
கடந்த 24.10.2010 அன்று தேனி மாவட்டம் தேக்கம்பட்டி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட சமத்துவபுரம் திறப்பு விழா மற்றும் 80 கோடி அளவிலான மக்கள் நலத்திட்டங்களை வழங்க வந்த துணை முதல்வர் ஸ்டாலின் ,மகளிர் சுய உதவிக்குழுவினருக்கும் கடன் வழங்கினார்.
138 சங்கங்களைச் சேர்ந்த 2060 குழுக்களுக்கு 23 கோடியே 56 லட்சத்து 799 ரூபாய் கடன் வழங்கப்பட்டு இதன் மூலம் 28466 பயனாளிகள் பயன்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.ஊரக வளர்ச்சி முகமை மகளிர் திட்டம்,வாழ்ந்து காட்டுவோம் திட்டம் வனத்துறை,கூட்டுறவுத்துறை ,வேளாண்மைதுறை ,கல்வித்துறை,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை உள்ளிட்ட 12 துறைகளின் கீழ் இந்த நிதி வழங்கப்பட்டதாக கூறப்பட்டது.ஆனால் இவையனைத்தும் மேடையில் வழங்கப்பட்டதோடு சரி,நான்கு மாத காலமாகியும் ,இன்னும் பயனாளிகளுக்கு வந்து சேரவில்லை.பெண்கள் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண்கள் வங்கிக்கு நடையாய் நடந்து களைத்துப்போனது தான் மிச்சம்.
ஆண்டிபட்டி தாலுகாவில் மட்டும் 181 குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு ஒரு குழுவிற்கு 60 ஆயிரம் வீதம் கடன் வழங்க ஸ்டேட் பேங்க் பாஸ்புக் வழங்கப்பட்டுள்ளது.அதே போல் பொருளாதாரக் கடனாக 24 குழுக்களுக்கு 3 லட்சம் வீதம் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை வழங்கப்படவே இல்லை.வங்கி அதிகாரியிடம் கேட்டால் கொட்டேசன் கொடுங்கள் என்று கூறி இழுத்தடிக்கிறார்.ஏற்கனவே தொழிலுக்காக கொட்டேன் கொடுத்த நிலையில் மீண்டும் அதையே சாக்காக கேட்பது,இழுத்தடிப்பதற்கான காரணமாகவே தெரிகிறது.3 லட்சம் கடன் தொகையில் 1 இலட்சம் அரசு மானியமாகவும் ,2 இலட்சம் வங்கி கடனாகவும் உள்ளது.அதே போல் குழுக்களுக்கான 60 ஆயிரம் கடனில் 10 ஆயிரம் அரசு மானியமாகவும் ,50 ஆயிரம் வங்கி கடனாகவும் உள்ளது.அதிக தொகை வங்கி சார்பில் கொடுக்கப்படுவதாலேயே இந்த இழுத்தடிப்பு நடவடிக்கை என்று கூறப்படுகிறது.ஆனால் அரசு குறிப்புகளில் இந்தியாவில் கடனை திருப்பி செலுத்துவதில் தமிழக மகளிர் சங்கங்கள் முன்னோடியாக இருப்பதாகவும் ,மகளிர் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடனில் 90 சதவிகிதம் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது.அப்படியிருக்க ஏன் இந்த இழுத்தடிப்பு நடவடிக்கைகள்:
இதில் மற்றொரு வேடிக்கை கடந்த ஆண்டு 2-வது மாதம் போடி தாலுகா லட்சுமிநாயக்கன்பட்டியில் சமத்துவபுரம் திறந்த போது அறிவித்த 3 லட்சத்திற்கான கடனுதவியில் ஆண்டிபட்டி பகுதியில் மட்டும் 14 குழுக்களுக்கு இன்னும் வழங்கப்படவில்லை.மேலும் இதை விட ஆச்சர்யமாக கடந்த 16.2.2007-ல் ஆண்டிபட்டியில் நடந்த விழாவில் 2695 குழுக்களுக்கு ரூபாய் 2703 லட்சங்கள் ,43,491 பயனாளிகளுக்காக வழங்கப்பட்டு ,அவையும் இன்னும் சரியான முறையில் செட்டில் ஆகாமல் இருப்பதும் ஆச்சரியத்திற்குரியதே.ஆனால் துணை முதல்வர் ஸ்டாலின் மேடையிலேயே நின்று பல மணி நேரம் இருந்து கால் கடுக்க அத்தனை குழுக்களுக்கும் கடனுதவிக்கான காசோலைகளை வழங்கியதாக கூறிக்கொள்கிறார்.இன்னும் ஒருபடி மேலே போய் கின்னஸில் இடம் பிடிக்க போவதாகவும் பீற்றிக்கொள்கிறார்கள்.ஆனால் உண்மையில் ஏட்டளவில் இருக்கும் இந்த கடன்களை கொடுக்கப்போவதி யார்? 2011 க்கான சட்டசபை தேர்தல் விரைவில் வர இருக்கும் நிலையில் அவசர கோலத்தில் அளிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் யாரை ஏமாற்ற நடத்தப்படுகிறது?
இது ஒருபுறமிருக்க கடனை உடனே பெற்றுத்தருகிறோம் என்று கூறி,3 லட்சம் கடனுக்கு பயனாளிகள் ஒருவருக்கு 2 ஆயிரம் வீதமும்,மற்ற கடன்களுக்கு குழுக்களுக்கு 2 ஆயிரம் வீதமும் லஞ்சம் வாங்கி சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செயல்படுவது வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவதாக இருக்கிறது.
கடன்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் பெண்கள் நாளையும்,பொழுதையும் சங்கங்களிலும் ,வங்கிகளிலும் கழித்து வருகிறார்கள்.ஏற்கனவே முறையாக கடனை திருப்பி செலுத்திய குழுக்களுக்கும் இதனால் கடன் தருவது நிறுத்தப்பட்டுள்ளது.ஆண்டிபட்டி பகுதியில் மட்டுமே 181 குழுக்களுக்கு வழங்காமல் இருக்கும் நிலையில்,மாவட்டம் முழுவதிலுமே இதே நிலையிலேயே இருக்கிறது.தமிழகம் முழுவதுமே இதே நிலையாக இருக்குமோ என அச்சப்பட வைத்துள்ளது.வங்கிகளிடம் பரஸ்பரம் புரிதல் இல்லாமல் சித்தன் போக்கு சிவன் போக்காய் எடுத்தோம் ,கவிழ்த்தோம் என்ற அடிப்படையில் இது போன்ற திட்டங்களால் அரசு இயந்திரம் ,தேவையற்ற விழாக்களுக்கு செலவு செய்து,மந்தமாகி போனதாகவே தெரிகிறது.
ஏற்கனவே இந்தியாவை மட்டுமல்லாமல் அகில உலகத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய மெகா,மெகா ஊழல் ஸ்பெக்ட்ரம் விவகாரம் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் ,தமிழகத்தின் அரசு இது போன்ற தவறுகளால் மேலும் தலைகுனிவை அடைய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.