எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஞ்சி,அக்.4 - கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதனையொட்டி ராஞ்சியில் உள்ள மத்திய சிறையில் லாலு அடைக்கப்பட்டார். தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.
ஏறக்குறைய கடந்த17 ஆண்டுகளுக்கு முன்பு பிரிக்கப்படாத பீகார் மாநிலத்தின் முதல்வராக ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது கால்நடைகளுக்கு தீவனம் கொள்முதல் செய்ததில் ரூ. 950 கோடிக்கு ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு அவர் மீது சுமத்தப்பட்டது. இதனையொட்டி அவர் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக அவரது மனைவி ராப்ரி தேவி முதல்வராக பதவி ஏற்றார். லாலு மீது கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட பிறகு மத்திய ரயில்வே அமைச்சராக லாலு பதவி வகித்தார். இந்த வழக்கு விசாரணை கடந்த17 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. கடந்த பல நாட்களுக்கு முன்பு விசாரணை முடிந்து ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அப்போது கால்நடை தீவன ஊழல் வழக்கில் முன்னாள் முதல்வர்கள் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் உள்பட45 பேர் குற்றவாளிகள் என்று கோர்ட்டு அறிவித்தது. ஆனால் அவர்களுக்கு தண்டனை விபரம் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையில் லாலு பிரசாத் யாதவ் உள்பட45 பேருக்கு நேற்று தண்டனை விபரத்தை ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டு நீதிபதி பி.கே. சிங் அறிவித்தார். தீர்ப்பில் லாலு பிரசாத் யாதவுக்கு5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.2 5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. கால்நடை தீவன ஊழல் வழக்கு பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் அரசு கஜானாவில் ரூ.37.30 கோடி ரூபாய் எடுக்கப்பட்டதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் பல பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
லாலுவுக்கு5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.2 5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதன் மூலம் அவர் லோக்சபை எம்.பி. பதவியை இழந்துவிட்டார். மேலும் நீதிபதி தீர்ப்பு வழங்கியவுடன் ராஞ்சிக்கு வெளியே உள்ள பீர்ஷா முண்டா மத்திய சிறையில் லாலு அடைக்கப்பட்டார். இந்த தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அவரது கட்சியான ராஷ்ட்ரீய ஜனதாதளம் முடிவு செய்துள்ளது. இந்த தண்டனை வழங்கப்பட்டிருப்பதால் லாலு பிரசாத் இனிமேல்11 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது. எம்.எல்.ஏ.வாக இருந்தால்5 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது. தண்டனை பெறும் அரசியல்வாதிகளை காப்பாற்றும் வகையில் மத்திய அரசின் சிபாரிசு பேரில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அவசர சட்டம் ரத்து செய்யப்பட்டது. அவசர சட்டம் ரத்து செய்யப்படாமல் இருந்திருந்தால் லாலு பிரசாத் யாதவின் எம்.பி. பதவி தப்புவதோடு வருங்காலத்தில் தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த வாய்ப்பு போய்விட்டது. அதே சமயத்தில் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பில் தண்டனை பெறும் எம்.பி.கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அதாவது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்து இடைக்கால தடை பெற்றால் தேர்தலில் போட்டியிட முடியும். அதனால் லாலுவுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய அவரது கட்சி முடிவு செய்திருக்கிறது. அதனால் அப்பீல் மூலம் இடைக்கால தடை கிடைக்கவும் லாலுவுக்கு வாய்ப்பு ள்ளது. அதே சமயத்தில் லாலுவுக்கு மேலும் ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது பீகார் மாநிலத்தில் காங்கிரஸ்__ராஷ்ட்ரீய ஜனதாதளம் இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு இல்லை. அதேசமயத்தில் காங்கிரஸ்_ஐக்கிய ஜனதாதளம் சார்பாக கூட்டணி ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில் பீகார் மாநில மற்றொரு முன்னாள் முதல்வர் ஜெகநாத் மிஸ்ராவுக்கு4 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று தீர்ப்பின்போது ஆஜராகாத3 பேருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தண்டனையை நீதிபதி அறிவித்தபோது தண்டனையை குறையுங்கள் என்று நீதிபதியை பார்த்து லாலு பிரசாத் யாதவ் கெஞ்சினார். நான் பீகார் மாநிலத்தின் இரண்டு முறை முதல்வராக இருந்திருக்கிறேன். மத்திய ரயில்வே அமைச்சராகவும் பதவி வகித்துள்ளேன். அதனால் எனக்கு வழங்கப்பட்டுள்ள தண்ட+னையை குறையுங்கள் என்று கெஞ்சினார். ஆனால் தண்டனையை நீதிபதி குறைத்ததாக தெரியவில்லை. கடந்த3 நாட்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்யசபை எம்.பி. ரஷீத் மசூத்திற்கு அடுத்து லாலு எம்.பி. பதவியை இழந்துள்ளார்.
தண்டனை பெறும் அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது என்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தண்டனை பெற்றால் அவர்களின் பதவி தண்டனை அறிவிக்கப்பட்ட நாளே பறிபோய்விடும் என்றும் சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பானது இந்திய சுதந்திர வரலாற்றின் பொன்னேட்டில் பதிக்கப்பட வேண்டியவையாகும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.