முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இத்தாலி படகு விபத்தில் சாவு எண்ணிக்கை 300 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

ரோம், அக். 5 - கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் இருந்து பிழைப்பு தேடி 500 க்கும் மேற்பட்டோர் ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு படகில் வந்தனர். இந்த படகு இத்தாலியின் சிசிலி தீவு அருகில் வரும் போது தீப்பிடித்தது. 

பின்னர் அந்த படகு கடலில் மூழ்கியது. தகவலறிந்த இத்தாலி கடலோர காவல் படையினர் அவர்களை மீட்க மற்றொரு படகில் சென்றனர். இருந்தும் கோர விபத்தில் 90 பேர் பலியாகினர். அவர்களில் 3 குழந்தைகள் மற்றும் 2 கர்ப்பிணி பெண்கள் அடங்குவர் என இத்தாலி உள்துறை அமைச்சர் ஏஞ்சலினோ அல்பானோ தெரிவித்தார். 

இதனிடையே இடிபாடுகளில் சிக்கியும், தண்ணீரில் மூழ்கிய நிலையிலும் மேலும் 40 உடல்கள் மீட்கப்பட்டன. இதுவரை விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 300 ஆக உயர்ந்துள்ளது என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். விபத்தில் சிக்கிய 150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் கடலோர காவல் படையும், உள்ளூர் மீனவர்களும் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய படகில் எரித்ரியா, சோமாலியா நாடுகளை சேர்ந்தவர்கள் பயணம் செய்தனர். இவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு லிபியாவின் மிஸ்ரதா துறைமுகத்தில் இருந்து சென்றவர்கள் ஆவார்கள். கடந்த 20 ஆண்டுகளில் இது போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு படகுகளில் வந்தவர்கள் 17 ஆயிரம் பேர் விபத்துக்குள்ளாகி இறந்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்