முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு: சல்மான் குர்ஷித் பேட்டி

திங்கட்கிழமை, 7 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

கொழும்பு. அக்.8 - தமிழக_இலங்கை மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் சல்மான் குர்ஷித்  தெரிவித்தார்.

இலங்கைக்கு நேற்று சென்ற சல்மான் குர்ஷித் அந்நாட்டு அமைச்சர் ஜி.எல். பெரீஷை சந்தித்துப் பேசினார். அதன்பிறகு அவர்கள் இருவரும் கூட்டாகப் பேட்டி அளித்தனர். அப்போது குர்ஷித் கூறியது:

தமிழக_இலங்கை மீனவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படும் என்றார். அப்போது குறுக்கிட்ட இலங்கை அமைச்சர் பெரீஷ், தமிழக மீனவர்கள் அடிக்கடி எல்லை தாண்டுவதாகவும், இதை அவர்கள் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அப்போது அருகிலிருந்த குர்ஷித் இதை தட்டிக் கேட்கவில்லை.

மாறாக இரு நாடுகளுக்கிடையே வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. யாழ்ப்பாணத்தில் இன்று வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனை சல்மான் குர்ஷித் சந்திக்கிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்