எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா, மே.14 - மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையுடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளாக இருந்து வந்த இடதுசாரி கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல்கள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டன. இம்மாநிலத்தில் மாவோயிஸ்ட், நக்சலைட் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் பாதுகாப்பு காரணம் கருதி 6 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தப்பட்டன. மாநில போலீசார் துணை ராணுவ படையினர் ஆகியோர் அதிக அளவில் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்ப்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சிகள் ஓரணியாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் காங்கிரஸ் கட்சியும் மற்றொரு அணியாகவும் போட்டியிட்டன. இந்த தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நேற்று பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ஆரம்பம் முதற்கொண்டே முன்னிலை வகித்த திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அதிகமான இடங்களில் வெற்றி பெற்றது. கடைசியாக கிடைத்த தகவலின்படி மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி 226 தொகுதிகளில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைக் கைப்பற்றி மேற்கு வங்காளத்தில் ஒரு வரலாற்றை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 34 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த இடதுசாரி கட்சிகளுக்கு இந்த தேர்தலில் பலத்த அடி கொடுக்கப்பட்டுள்ளது. இடதுசாரி கூட்டணி கட்சிகள் 62 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. மேற்கு வங்காளத்தில் சிங்கூர், நந்திகிராம் ஆகிய இடங்களில் நடந்த நில ஆர்ஜித எதிர்ப்பு போராட்டங்களின்போது ஏற்பட்ட கலவரங்கள் இந்த தேர்தலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. மேலும் இடதுசாரி கட்சியினரின் வன்முறை மற்றும் மோதல் போக்குகள் காரணமாகவும் இடதுசாரி கட்சிகளுக்கு இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் இடது கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜோதிபாசுதான் நீண்டகாலமாக முதல் அமைச்சராக பதவியில் இருந்தார். அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பிறகு அந்த முதல்வர் பதவிக்கு புத்ததேவ் பட்டாச்சார்யா நியமிக்கப்பட்டார். அதன்பிறகு ஜோதிபாசு மரணமடைந்துவிட்டார். புத்ததேவ் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்ற பிரச்சாரத்தை திரிணமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பேனர்ஜி ஒரு முக்கிய ஆயுதமாக கையிலெடுத்துக் எடுத்துக்கொண்டார். கடந்த 34 ஆண்டுகளில் மேற்கு வங்காளத்தில் வளர்ச்சி பணிகள் எதுவுமே நடக்கவில்லை என்று கூறியும் அவர் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்திற்கு இப்போது நல்ல பலன் கிடைத்துள்ளதாக அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார். இந்த வெற்றியை திரிணமுல் காங்கிரஸ் தொண்டர்கள் அமைதியான முறையில் கொண்டாடும்படியும் அவர் கேட்டுக்கொண்டார். அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைமையில் புதிய ஆட்சி மேற்கு வங்காளத்தில் மலர்கிறது. புதிய முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் மம்தா பேனர்ஜி வருகிற 18 ம் தேதி பதவி ஏற்கிறார். இதற்கான ஏற்பாடுகள் கொல்கத்தாவில் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா உள்பட இடதுசாரி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலர் பெரும் தோல்வியை சந்தித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று திரிணாமுல் காங்கிரஸ் அமோக வெற்றிபெற்றதை அடுத்து கொல்கத்தாவில் உள்ள மம்தா பேனர்ஜியின் இல்லத்தில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு மம்தாவை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர். இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர். மேலும் பட்டாசுகளை வெடித்தும் கட்சித் தொண்டர்கள் களிப்பில் ஈடுபட்டனர். மம்தா முதலமைச்சராக பதவியேற்க இருப்பதால் அவர் தனது மத்திய ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறார். எனவே மத்திய ரயில்வே அமைச்சர் பதவிக்கு வேறு ஒருவர் விரைவில் நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பதவியும்கூட தனது திரிணமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவருக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று மம்தா பேனர்ஜி காங்கிரஸ் கட்சியை வலியுறுத்தியுள்ளார்.
இடதுசாரி கட்சிகளின் இரும்புக் கோட்டையாக பல ஆண்டுகாலமாக திகழ்ந்துவந்த மேற்குவங்காளத்தில் தனது அயராத அரசியல் பணிகள் மூலம் இடதுசாரி கட்சிகளை வீழ்த்திய பெருமை மம்தாவையே சேரும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.