முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தலுக்கு தயாராக இருங்கள்: சரத்பவார் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 10 அக்டோபர் 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, அக். 11 - காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி நடத்தி வருகிறது. இதன் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. இதனால் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தல் நடைபெறும். இந்த நிலையில் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் வரும். அதற்கு தயாராக இருங்கள் என்றும் கட்சி நிர்வாகிகளிடம் தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய மந்திரியுமான சரத்பவார் வலியுறத்தி உள்ளார். 

தேசியவாத காங்கிரசின் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் மும்பையில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பவார் பேசியது, தெலுங்கானா விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. சீமாந்திரா பகுதியை சேர்ந்த 7 எம்.பி.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். எனவே டிசம்பர் மாதத்துக்கு பிறகு எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம். இதனால் தேசியவாத காங்கிரஸ் நிர்வாகிகள் தயாராக இருங்கள். இவ்வாறு அவர் கூறினார். மத்திய ஆளும் கூட்டணியில் தேசியவாத காங்கிரசும் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்