எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சீமாந்திரா, அக். 11 - ஆந்திர மாநிலம் சீமாந்திரா பகுதியில் மின்சார ஊழியர்கள் நடத்தி வந்த காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. ஆந்திராவை தாக்கப் போகும் புயலை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். இன்று காலை 6 மணிக்கு அவர்கள் பணிக்கு திரும்புவதால் அம்மாநில மக்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்து விட்டது. இதை எதிர்த்து இம்மாநிலத்தில் உள்ள சீமாந்திரா பகுதி மக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பு மக்கள் கடும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த மாநிலத்தில் மொத்தம் 42 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டால் அந்த மாநிலத்திற்கு 17 எம்.பி. தொகுதிகள் போய் விடும். மேலும் மாநிலம் பிரிக்கப்படுவதால் பல பாதிப்பு ஏற்படும் என்று ராயலசீமா, கடலோர ஆந்திர மக்கள் கருதுகிறார்கள். அதனால்தான் போராட்டம் நீடித்து வருகிறது. இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ் முதல்வர் கிரண்குமார் ரெட்டியே ஆதரவாக இருக்கிறார். மற்ற தலைவர்களை போல இவரும் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். பதவியை ராஜினாமா செய்ய கூட தயார் என்று கூட இவர் அறிவித்து விட்டார். இதனால் தமிழக ஆளுனராக இருக்கும் ரோசய்யாவை மீண்டும் ஆந்திர முதல்வராக்கலாமா என்று கூட மத்திய அரசு யோசித்தது. ஆனால் இந்த யோசனையை ரோசய்யா ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. மீண்டும் ஆந்திர முதல்வராக அவருக்கு விருப்பமில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினார்கள். இந்த போராட்டம் நேற்று 6 வது நாளாக நீடித்தது. இதனால் 13 மாவட்டங்கள் இருளில் மூழ்கின. மக்கள் பெரும் தவிப்புக்கு ஆளாகி போனார்கள். இந்த நேரத்தில் ஆந்திராவை புயலும் தாக்கப் போகிறது என்ற செய்தி வெளியானது. அதாவது வரும் சனிக்கிழமை ஆந்திராவை புயல் தாக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதனால் அரண்டு போனார் மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி.உடனே மின்சார ஊழியர்கள், சங்க பிரதிநிதிகளை அவர் அழைத்து பேச்சு நடத்தினார். புயல் வரப் போகிறது. நீங்களும் வேலை நிறுத்தத்தை தொடர்ந்தால் மாநிலமே இருளில் மூழ்கி விடும் என்று அவர் கவலை தெரிவித்தாராம். இதை ஏற்றுக் கொண்ட மின் ஊழியர்களின் சங்க பிரதிநிதிகள் தற்காலிகமாக வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக் கொண்டனர். புயலை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு அவர்கள்வந்துள்ளனர். இது தற்காலிகமான முடிவுதான். எந்த நேரத்திலும் மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடங்குவோம் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர். புயலை கருத்தில் கொண்டு வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக நிறுத்தும் அவர்கள் இன்று காலை 6 மணிக்கு பணிக்கு திரும்புகிறார்கள். அப்படி ஒரு உறுதிமொழியை முதல்வரிடம் அவர்கள் கொடுத்துள்ளனர். மத்திய அரசை தண்டிப்பதற்காகவே இவர்கள்வேலை நிறுத்தபோராட்டம் தொடங்கினர். ஆனால் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தங்கள் முடிவை தற்காலிகமாக மாற்றிக் கொண்டு விட்டனர். இதன்படி ஆயிரக்கணக்கான மின் ஊழியர்கள் இன்று பணிக்கு திரும்புவதால் மக்கள் ஓரளவு நிம்மதியடைந்துள்ளனர்.
இதனிடையே தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்திரபாபு நாயுடு டெல்லியில் 4 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். இந்த விஷயத்தில் உண்ணாவிரதம் இருந்த ஜெகன்மோகன் ரெட்டியை போலீசார் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அப்போது டாக்டர்கள் ஜெகன்மோகன் ரெட்டி உடல் நலத்தை பேண வேண்டும். சாப்பிடாமல் இருக்க கூடாது என்று எச்சரித்தார்களாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.