முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதலமைச்சர் கருணாநிதி ராஜினாமா ஏற்பு

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, மே.14 - முதலமைச்சர் கருணாநிதியின் ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக, தமிழக கவர்னர் பர்னாலா அறிவித்துள்ளார்.இதுகுறித்த விபரம் வருமாறு:-

நடந்து முடிந்த தமிழக சட்டபேரவை தேர்தலில், தி.மு.க. தலைமையிலான கூட்டணி படுதோல்வியடைந்ததையடுத்து, தனது பதவி விலகல் கடிதத்தை முதலமைச்சர் கருணாநிதி, கவர்னர் பர்னாலாவிற்கு அனுப்பிவைத்தார்.

இந்த ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாக கவர்னர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து கவர்னர் அலுவலக செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தாங்கள் மற்றும் தங்களின் அமைச்சரவை சகாக்கள் அளித்திருந்த ரஜினாமாவை நான் ஏற்றுக் கொண்டேன். முதலச்சராக இருந்து, தாங்கள் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி.

இவ்வாறு கவர்னர் பர்னாலா முதலமைச்சர் கருணாநிதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்