முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீ விபத்தில் ஜப்பானில் 10 பேர் உடல் கருகி சாவு

வெள்ளிக்கிழமை, 11 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ,அக்.12 - ஜப்பானில் உள்ள மருத்துவமனையில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஜப்பானில் வடக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. க்யூஷ் தீவு. இங்குள்ள பிரபல எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமான வெளிநோயாளிகளும் வெளி நோயாளிகளும் தினமும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வழக்கம்போல் ஊழியர்களும் நோயாளிகளும் தூங்கிக்கொண்டியிருந்தனர். அப்போது மருத்துவமனையின் 4_வது தளத்தில் நள்ளிரவு சுமார் இரண்டரை மணி அளவில் திடீரென புகை வருவது தெரிந்தது. அப்போது விழித்திருந்த நோயாளிகள் புகையை பார்த்து கூச்சலிட்டனர். தகலறிந்த தீயணைப்பு படையினர் மருத்துமனைக்கு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் தீயில் கருகி 8 நோயாளிகளும் 2 ஊழியர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முற்றிலும் உடல் கருகி இருப்பதால் அவர்களை அடையாளம் காணும் பணி நடக்கிறது. மேலும் இந்த சம்பவத்தில் 8 நோயாளிகள் படுகாயம் அடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்