முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருவில் ஆற்றில் பஸ் விழுந்ததில் 60 பேர் பலி

திங்கட்கிழமை, 14 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

லிமா, அக்.15 - பெரு நாட்டில் நடந்த பஸ் விபத்தில் 60 பேர் உயிரிழந்ததாக செய்திகள் தெரிவித்தன. வட அமெரிக்க நாடான பெருவில் மலைச் சரிவில் சென்ற பஸ் ஆற்றில் விழுந்ததில்  60 பேர் இறந்தனர். 

பெரு நாட்டில் சான்டா தெரசதா மாகாணத்தில் மலைப் பாதையில் சென்றுகொண்டிருந்த ப.யணிகள் பஸ் எதிரே வந்த சரக்கு லாரிக்கு வழிவிட முயன்றது. அப்போது மலைச் சரிவில் சென்றபஸ்  சவுபிமாயோ ஆற்றில் விழுந்தது. இந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் பஸ்ஸிலிருந்த பயணிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். பஸ் விபத்து இரவில் நடந்ததால் பயணிகளை மீட்க முடியவில்லை.  இந்த விபத்தில் 12 குழந்தைகள் உள்பட 60 பேர் உயிரிழந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்