முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊக்க மருந்தில் சிக்கிய ஜூடோ வீராங்கனைக்கு 2 ஆண்டு தடை

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

பிரெஸ்ஸல்ஸ், அக்.16 - ஊக்க மருந்தில் சிக்கிய ஜூடோ வீராங்கனை சார்லினுக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்தவர் சார்லின் வான்ஸ்னிக். ஜூடோ வீராங்கனையான சார்லின்  கடந்த ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றார். கடந்த ஆகஸ்ட் மாதம் ரியோடி ஜெனிரோவில் நடந்த உலக ஜூடோ போட்டியிலும் வெண்கலப் பதக்கம் வென்றார்.

எனினும் சிறுநீர் பரிசோதனையில் இவர் கோனை என்னும் ஊக்க மருந்தை பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. இதற்காக இவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையேநான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை என்று சார்லின் மறுப்பு தெரிவித்துள்ளார். இது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது என்று அவர் கூறினார்.         

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்