முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சச்சினின் விருப்பப்படி மும்பையில் 200வது டெஸ்ட்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2013      விளையாட்டு
Image Unavailable

 

புது டெல்லி, அக். 16 - இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் ஏற்கனவே ஒரு நாள் போட்டி மற்றும் 20_20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். 198 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள அவர் தனது 200 வது போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டார். மேலும் 200 வது போட்டியை தனது சொந்த மண்ணான மும்பையில் நடத்த வேண்டும் என்று பி.சி.சி.ஐ.யிடம் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்நிலையில் வெஸ்ட்இண்டீஸ் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. போட்டிகளை எங்கு நடத்துவது என்பது குறித்து பி.சி.சி.ஐ. யின் நிகழ்ச்சி மற்றும் அட்டவணை கமிட்டி கூட்டம் ராஜீவ் சுக்லா தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 6 ம் தேதி முதல் 10 ம் தேதி வரை கொல்கத்தாவில் நடத்த முடிவு செய்யப்பட்டது. சச்சினின் விருப்பப்படி அவரது 200 வது டெஸ்ட் போட்டியும், வெஸ்ட் இண்டீசுடனான 2 வது டெஸ்ட் போட்டியும் மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 14 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் ஒரு நாள் போட்டி கொச்சியில் நவம்பர் 21 ம தேதியும், 2 வது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நவம்பர் 23 ம தேதியும், 3 வது ஒரு நாள் போட்டி நவம்பர் 27 ம் தேதி பரோடா அல்லது கான்பூரில் நடைபெறும் என்று தெரிகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்