முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விபா புயல்: ஜப்பானில் 20 பேர் பலி

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2013      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, அக்.18 - ஜப்பானில் விபா புயலால் 20 பேர் உயிரிழந்துள்ளனர். ஜப்பானில் மையம் கொண்டிருந்த விபா புயல் டோக்கியோ அருகே கரை கடந்தது. இந்த புயல், மழையால்  ஓஷிமோ தீவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓஷிமோ தீவில் ஒரு ம ணிக்கு 122 மி.மீ மழை பெய்துள்ளது.  பல வீடுகள் இடிந்து தரை மட்டமாகி உள்ளன. எங்கும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. டோக்கியோவில் உள்ள ஹனேடா, நரிட்டா விமான நிலையங்களில் 500_க்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ரயில் சேவைகளும் முடங்கின.  புயலால் 20 பேர் உயிரிழந்தனர். 13 பேர் உடல்கள் மீட்கப்பட்டன. 50 பேரை காணவில்லை. 

விபா புயல் நேற்று முன்தினம் புகுஷிமா அணு உலை பகுதியை கடந்தது. இதற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்