முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜார்கண்ட் ஐகோர்ட்டில் லல்லு பிரசாத் மேல் முறையீடு

வியாழக்கிழமை, 17 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

ராஞ்சி, அக். 18 - தனக்கு அளிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து லல்லுபிரசாத் யாதவ் ஜார்கண்ட் ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்வருமான லல்லுபிரசாத் யாதவ் மீது கால்நடை தீவன ஊழல் தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஞ்சி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முதலில் லல்லு பிரசாத் குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம், இரண்டு நாட்கள் கழித்து அவருக்கான தண்டனை விபரத்தையும் அறிவித்தது. அதன்படி ஊழல் வழக்கில் சிக்கிய லல்லு பிரசாத் யாதவிற்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மேல் முறையீடு செய்யப் போவதாக அவர் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று ஜார்கண்ட் உயர்நீதிமன்றத்தில் லல்லு பிரசாத் யாதவ் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லல்லு மனு தாக்கல் செய்ததை அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்