முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலக்கரி ஒதுக்கீடு: விளக்கமளிக்க தவறி விட்டார் பரேக்

சனிக்கிழமை, 19 அக்டோபர் 2013      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, அக். 20 - முதலில் நிராகரிக்கப்பட்ட ஹிண்டால்கோ நிறுவனத்துக்கு முடிவை மாற்றி நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்ததற்கான விளக்கத்தை முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் பி.சி. பரேக் அளிக்க தவறி விட்டதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. 

1993 ம் ஆண்டில் இருந்து செய்யப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரித்து வரும் சி.பி.ஐ. இது வரை 14 குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது. இதில் 1993 முதல் 2004 வரை மற்றும் 2006 முதல் 2009 வரையிலான காலக்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில் ஹிண்டால்கோ நிறுவனத்தின் மீது வழக்கு தாக்கல் செய்யும் முன்னர் அந்நிறுவனத்துக்கு நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு செய்த அப்போதைய நிலக்கரி துறை செயலாளர் பி.சி. பரேக்கிடம் தீவிர விசாரணை நடத்தியதாகவும் ஆனால் உரிய விளக்கத்தை அவரால் அளிக்க முடியவில்லை என்றும் சி.பி.ஐ. வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்